<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:geo="http://www.w3.org/2003/01/geo/wgs84_pos#" xmlns:media="http://search.yahoo.com/mrss/"
	>

<channel>
	<title>Siva's Chronicle</title>
	<atom:link href="http://sivaramang.wordpress.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://sivaramang.wordpress.com</link>
	<description></description>
	<lastBuildDate>Sun, 14 Aug 2011 11:56:47 +0000</lastBuildDate>
	<language>ta</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.com/</generator>
<cloud domain='sivaramang.wordpress.com' port='80' path='/?rsscloud=notify' registerProcedure='' protocol='http-post' />
<image>
		<url>http://s2.wp.com/i/buttonw-com.png</url>
		<title>Siva's Chronicle</title>
		<link>http://sivaramang.wordpress.com</link>
	</image>
	<atom:link rel="search" type="application/opensearchdescription+xml" href="http://sivaramang.wordpress.com/osd.xml" title="Siva&#039;s Chronicle" />
	<atom:link rel='hub' href='http://sivaramang.wordpress.com/?pushpress=hub'/>
		<item>
		<title>மதராசபட்டினம் (2010)</title>
		<link>http://sivaramang.wordpress.com/2010/07/09/%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-2010/</link>
		<comments>http://sivaramang.wordpress.com/2010/07/09/%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-2010/#comments</comments>
		<pubDate>Fri, 09 Jul 2010 13:56:22 +0000</pubDate>
		<dc:creator>sivaramang</dc:creator>
				<category><![CDATA[சினிமா]]></category>

		<guid isPermaLink="false">http://sivaramang.wordpress.com/?p=280</guid>
		<description><![CDATA[’கிரீடம்’ என்கிற லோகித்தாஸின் அருமையான திரைக்கதையை சொதப்பி தன் திரைவாழ்வை துவக்கிய இயக்குனர் விஜய் மதராசபட்டினம் மூலம் புனர்ஜென்மம் பெற்றிருக்கிறார். சுதந்திரம் பெறாத இந்தியாவில் ஒரு ஆங்கில கவர்னரின் பெண்ணுக்கும், தமிழ் வண்ணான் பையனுக்கும் வரும் காதல் சுதந்திரம் பெற்ற பிறகு என்ன ஆனது என்பதுதான் மதராசபட்டினத்தின் அடிப்படை முடிச்சு. மல்யுத்தப்போட்டியில் வெற்றிபெற்றால் வண்ணாரப்பேட்டை நிலங்கள் திருப்பித்தரப்படும் என்று ஒரு லகான், வெள்ளைக்கார கமிஷனருக்கு நிச்சயக்கப்பட்ட பெண்ணை அடைய வரும் அடிமைப்பையனின் டைட்டானிக் என்று இரண்டு பெரிய [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sivaramang.wordpress.com&amp;blog=536366&amp;post=280&amp;subd=sivaramang&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>’கிரீடம்’ என்கிற லோகித்தாஸின் அருமையான திரைக்கதையை சொதப்பி தன் திரைவாழ்வை துவக்கிய இயக்குனர் விஜய் மதராசபட்டினம் மூலம் புனர்ஜென்மம் பெற்றிருக்கிறார்.</p>
<p>சுதந்திரம் பெறாத இந்தியாவில் ஒரு ஆங்கில கவர்னரின் பெண்ணுக்கும், தமிழ் வண்ணான் பையனுக்கும் வரும் காதல் சுதந்திரம் பெற்ற பிறகு என்ன ஆனது என்பதுதான் மதராசபட்டினத்தின் அடிப்படை முடிச்சு. மல்யுத்தப்போட்டியில் வெற்றிபெற்றால் வண்ணாரப்பேட்டை நிலங்கள் திருப்பித்தரப்படும் என்று ஒரு லகான், வெள்ளைக்கார கமிஷனருக்கு நிச்சயக்கப்பட்ட பெண்ணை அடைய வரும் அடிமைப்பையனின் டைட்டானிக் என்று இரண்டு பெரிய படங்களின் சாயல்களை எளிதில் நினைவுபடுத்தக்கூடிய கதைதான் என்றாலும் அதனையும் தாண்டி பிரத்தியேகக் காட்சிகளின் மூலமாக இதனை தனிமைப்படுத்தி காட்டியிருப்பது அருமை. தெளிவான திரைக்கதைதான் என்றாலும் இந்த நிகழ்காலத்துக்கும் கடந்தகாலத்துக்கும் பயணப்படும் திரைக்கதை உத்தி எனக்கு ஏனோ பெரிய உறுத்தலாகவே இருந்தது.</p>
<p>இந்த திரைப்படத்திற்கு ஏன் போகக்கூடாது என்று யோசித்தபோது முதலில் நினைவுக்கு வந்தது ஆர்யாவின் குரல்தான். அந்த சோதனை மிக அழகாக தவிர்க்கப்பட்டிருக்கிறது. அவருக்கு பெரும்பாலும் வசனமே கொடுக்கப்படவில்லை. பேசும் இடங்களிலும் ஒரே வாக்கியம் அல்லது வார்த்தைதான். அநேகமாக அவரது முதல் வசனமே முக்கால் மணி நேரம் கழித்துதான் வருகிறது என்று நினைவு. இந்த உத்தி ஒரு பெரிய வாழ்க்கைக்காவலன் (லைஃப் சேவர்).  இதற்கு பயந்தே இன்னும் திரைப்படம் பார்க்கப்போகாமல் தவிர்த்த நல்ல உள்ளங்கள் தைரியமாகப்போகலாம். கவலைப்படேல்.</p>
<p>எங்கும் உருத்தாத பழைய மதராசின் காட்சிகள் அருமை. அங்கங்கே இருக்கும் மிகச்சிறிய லோகேஷன் லாஜிக் உதறல்களையெல்லாம் தவிர்த்துவிடுதல் நலம். நீரவ் ஷாவின் கேமிரா மிகச்சிறந்த ஒன்று. செண்ட்ரல் முதலில் 3டி மாடலாக காட்டப்பட்டது போலவே இருந்தது. கடைசிக்காட்சிகளில்தான் செட் போடப்பட்டிருப்பதே தெரியவருகிறது. நல்ல காட்சிப்படுத்துதல்.</p>
<p>ஜி.வி.பிரகாஷின் அனைத்து பாடல்களுமே நன்றாக இருக்கின்றன. ’ஆருயிரே’ சைந்தவியும், ‘பூக்கள் பூக்கள் தருணம்’ ரூப் குமார் ரத்தோடும் இன்னும் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆயிரத்தில் ஒருவனை விட இது பல மடங்கு பரவாயில்லை என்றாலும் ’ஜிவிபி’ யின் பின்னணி இசை இன்னும் நல்ல தரத்திற்கு வரவில்லை. சுமாரகத்தான் இருந்தது. பெரும்பாலான நேரங்களில் அடக்கி வாசித்திருப்பதே அழகுதான்.</p>
<p>நல்ல படம். பெரிய திரையில் பார்க்க பல அழகான காட்சிகள் இருக்கின்றன. Very Decent worth a watch</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/sivaramang.wordpress.com/280/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/sivaramang.wordpress.com/280/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/sivaramang.wordpress.com/280/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/sivaramang.wordpress.com/280/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/sivaramang.wordpress.com/280/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/sivaramang.wordpress.com/280/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/sivaramang.wordpress.com/280/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/sivaramang.wordpress.com/280/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/sivaramang.wordpress.com/280/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/sivaramang.wordpress.com/280/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/sivaramang.wordpress.com/280/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/sivaramang.wordpress.com/280/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/sivaramang.wordpress.com/280/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/sivaramang.wordpress.com/280/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sivaramang.wordpress.com&amp;blog=536366&amp;post=280&amp;subd=sivaramang&amp;ref=&amp;feed=1" width="1" height="1" /><div class="sharedaddy sd-like-enabled"></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://sivaramang.wordpress.com/2010/07/09/%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-2010/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/d3ef1d6eddd934f7dcf8664a2950efb7?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">siva</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>மனதில் நின்ற சிறுகதைகள் 2009</title>
		<link>http://sivaramang.wordpress.com/2010/01/04/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-2009/</link>
		<comments>http://sivaramang.wordpress.com/2010/01/04/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-2009/#comments</comments>
		<pubDate>Mon, 04 Jan 2010 05:28:30 +0000</pubDate>
		<dc:creator>sivaramang</dc:creator>
				<category><![CDATA[சிறுகதை]]></category>

		<guid isPermaLink="false">http://sivaramang.wordpress.com/?p=273</guid>
		<description><![CDATA[இந்த சென்ற வருடத்தில் நான் படித்து மனதில் நிற்கும் சிறுகதைகளை வகைப்படுத்தியிருக்கிறேன். எல்லா வார இதழ், மாத இதழ்களையும் படிக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டுவதில்லை. ஆனந்த விகடன் மற்றும் குங்குமம் வார இதழ்களில் வெளியாகும் எல்லா சிறுகதைகளை படிக்கிறேன். வார்த்தை,உயிர்மை,உயிர் எழுத்து ஆகிய இதழ்களின் தலா 3 பிரதிகளும் காலச்சுவடு கதைகள் அவ்வப்போதும் இந்த சென்ற வருடத்தில் எனக்கு படிக்கக் கிடைத்தன. இதைத் தவிர்த்து இணையத்தில் வெளியிடப்படும் சிறுகதைகளில் சிலவும், புதிய கதைத் தளமாகிய http://www.tamilstory.in லும் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sivaramang.wordpress.com&amp;blog=536366&amp;post=273&amp;subd=sivaramang&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="text-decoration:line-through;">இந்த </span>சென்ற வருடத்தில் நான் படித்து மனதில் நிற்கும் சிறுகதைகளை வகைப்படுத்தியிருக்கிறேன். எல்லா வார இதழ், மாத இதழ்களையும் படிக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டுவதில்லை. ஆனந்த விகடன் மற்றும் குங்குமம் வார இதழ்களில் வெளியாகும் எல்லா சிறுகதைகளை படிக்கிறேன். வார்த்தை,உயிர்மை,உயிர் எழுத்து ஆகிய இதழ்களின் தலா 3 பிரதிகளும் காலச்சுவடு கதைகள் அவ்வப்போதும் <span style="text-decoration:line-through;">இந்த</span> சென்ற வருடத்தில் எனக்கு படிக்கக் கிடைத்தன. இதைத் தவிர்த்து இணையத்தில் வெளியிடப்படும் சிறுகதைகளில் சிலவும், புதிய கதைத் தளமாகிய <a title="தமிழ்கதைகள் தளம்" href="http://www.tamilstory.in" target="_blank">http://www.tamilstory.in</a> லும் க்தைகள் படித்திருக்கிறேன். இவற்றில் எனக்கு பிடித்த கதைகள் நிறைய இருக்கின்றன. ஆனால் இந்த பட்டியல் என் மனதைவிட்டு அகலாதன என்று ஸ்பெஷல் டைட்டில் வேண்டுமானால் கொடுத்துக்கொள்ளலாம். எழுத்தாளர் பெயர் சொன்னவுடனேயே இந்தக் கதை ஞாபகம் வருகிறது என்று சொல்வோமில்லையா அந்த வகையறாவாகக்கூட இருக்கலாம்.</p>
<p><strong>1. நேற்று நடந்தது &#8211; ராஜீமுருகன் </strong></p>
<p>ஆனந்தவிகடனில் 2009 புத்தகக்கண்காட்சியின்போதோ அல்லது அது முடிந்துவிட்ட மறு வாரமோ வந்த சிறுகதை. தமன்னாவுக்கு சிலை வைக்க பிளான் போடும் ஒரு பின்நவீனத்துவர், ரேஷன் என்கிற வார்த்தையை சொன்னால் அவன் குரல்வளையை நெறிப்போம் எனும் ஒரு ஜீன்ஸ் போட்ட தொங்குமீசை எழுத்தாளர், &#8221;நண்பா! லெக்பீஸ் பிளாக்ஸ்பாட் களம் வந்து பாருங்க. இருக் கிறதுல எக்கச்சக்க பின்னூட்டம் நமக்குத்தான். என்கிற ஒரு வலைத்தள் சுனாமி &#8216;அர்த்த ஜாம காம ரூப அதிவதினியின் இருள்&#8217;  என்ற தலைப்பை சன் பிக்சர்சுக்கு சிபாரிசிக்கும் தோழர் என கிறுகிறுவென சுத்த வைக்கும் பலபட்டறைக்கதை. ஆனால் படித்துமுடித்து கீழே வைத்த பிறகு நான் என்ன படித்தோம் என்று குழப்பம் வர மீண்டும் எடுத்து படிக்க வைக்கிற ஒரு சுவாரசியமும் இருந்தது.   ராஜீ முருகனின் நடை எனக்கு மிகவும் பிடித்தது. சிறுகதைத் தொகுப்பு ஏதேனும் வெளியிட்டிருக்கிறாரா என்று தெரியவில்லை. இருந்தால் கண்டிப்பாக வாங்க வேண்டும்.</p>
<p><strong>2. A,B,C அல்லது  D -சொக்கன் </strong></p>
<p><a title="தமிழ்கதைகள் தளம்" href="http://www.tamilstory.in" target="_blank">www.tamilstory.in</a> ல் வெளிவந்திருக்கும் இந்த சிறுகதை முன்பே எழுதப்பட்டிருக்கலாம். நான் இந்த வருடம்தான் படித்தேன். ஒரு aptitude test ற்கு தன்னை தயார் செய்யாது போய் விட்ட ஒரு மாணவன் தேர்வு தொடங்கியதிலிருந்து முடியும் நேரம் வரைக்கும் என்னென்ன நினைத்துக்கொள்வான், சிந்திப்பான், பக்கத்தில் உட்கார்ந்து தேர்வு எழுதுபவனைப்பற்றிய அவனது எண்ணங்கள் என மிக சுவாரசியமாக எழுதப்பட்டிருக்கிறது.  சொக்கனின் அபுனைவு கட்டுரைகளை நான் விரும்பி படிக்கிறேன். முத்தாரத்தில் வரும் அவரது தொடரை ஒரு வாரமும் விடுவதில்லை. அவரது வலைப்பக்கத்தில் அவர் எழுதும் ஹாஸ்யம் கொப்பளிக்கும் / குட் வில் போதனைகள் சொல்லும் பதிவுகளும் என் ஆத்மார்த்தமானவை. ஆயினும் அவர் கதை எழுதுவது பற்றி எனக்கு எந்த சிலாக்கியமும் இல்லை இந்த சிறுகதை படிக்கும் வரை. நல்ல கதை.  இணையத்தில் படிக்க்க் கிடைக்கிறது. <a href="http://www.tamilstory.in/?p=23">http://www.tamilstory.in/?p=23 </a></p>
<p><strong>3. கிணறு &#8211; ஆபிதீன் </strong></p>
<p>ஆபிதீனின் ’தினம் ஒரு பூண்டு’ எனது எப்போதும் பிடித்த சிறுகதைகளுள் ஒன்று. இதுவரை நான் படித்த சிறுகதைகளை ஒரு வரிசையில் அடுக்கினால் கண்டிப்பாக ஆபிதீனின் தினம் ஒரு பூண்டு அதில் அடங்கிவிடும். அதே நாகூர் மொழி கதைசொல்ல்ல் பாணியில் வார்த்தை இதழில் (அநேகமாக ஏப்ரல்) வெளிவந்த கிணறு எனக்கு மிகவும் பிடித்த்து.</p>
<p><strong>4. யார் அது அழுவது – ஆனந்த் ராகவ் </strong></p>
<p>ஆனந்த் ராகவ் என்கிற இந்த எழுத்தாளரின் சிறுகதைகள் அவ்வப்போது ஆன்ந்தவிகடனில் வருவதை பார்த்திருக்கிறேன். படித்திருக்கிறேனா என்றே நினைவில்லை. ஆனால் இந்த சிறுகதை சட்டென்று மனதில் ஒட்டிக்கொண்ட்து. இணையத்தில் அவரது வேறு சிறுகதைகளும் வாசிக்க கிடைத்தன. ஒரு நல்ல எழுத்தாளரை மிஸ் செய்துவிட்ட குற்ற உணர்வு வாட்டியது. அவசியம் அனைத்து சிறுகதை விரும்பிகளும் வாசித்து அனுபவிக்க வேண்டிய கதை இது. ஆன்ந்தவிகடன் டிசம்பர் மாத இதழ் ஒன்றில் வெளியாகி இருக்கிறது.</p>
<p><strong>5. வீடியோ மாரியம்மன் – இமையம் </strong></p>
<p>இதுவும் ஒரு பழைய சிறுகதை. இந்த வருடம்தான் நான் படித்தேன். நான் இமையத்தின் சிறுகதைகளை படித்த்தில்லை. இதுதான் முதல் கதை. இரண்டு மூன்று முறை விட்டு விட்டு பத்தி பத்திகளாகத்தான் படித்தேன். எனக்கு மிகவும் பிடித்த்து. இது இணையத்தில் கிடைக்கிறது.</p>
<p><a title="இமையம் சிறுகதை" href="http://www.kalachuvadu.com/issue-87/sirukathai.htm" target="_blank">http://www.kalachuvadu.com/issue-87/sirukathai.htm </a></p>
<p><strong>6. கைக்கிளை </strong>– சுதேசமித்திரன்  சுதேசமித்திரனின் கைக்கிளை வருட இறுதியில் படிக்க்க்கிடைத்த அருமையான சிறுகதை. Soft horror என்று இதை வகைப்படித்தினாலும் அருமையான வர்ணனைகள் இந்த சிறுகதையை சிறப்பாக்குகின்றன. ஆன்ந்த விகடனில் வெளிவந்த்து.</p>
<p><strong>7. உலை – இலவசக்கொத்தனார் </strong></p>
<p>பதிவரும், என்னை மிகவும் கவர்ந்த வெண்பா எழுத்தாளரின் குங்குமம் சிறுகதை. ஒரே வார்த்தையில் சொன்னால் ‘அற்புதம்’ .இது இணையத்தில் அவரது வலைப்பதிவில் படிக்க்க் கிடைக்கிறது.  <a href="http://elavasam.blogspot.com/2009/09/blog-post.html" target="_blank">http://elavasam.blogspot.com/2009/09/blog-post.html </a></p>
<p><strong>8.ஹேப்பி தீபாவலி – ராஜீ முருகன் </strong></p>
<p>மீண்டும் ராஜீமுருகன். பரபரவென போகும் வர்ணனைகளும், இறுதியில் வைக்கப்பட்ட அழுத்தமான முற்றுப்புள்ளிக்கு முந்தைய பத்தியும் கதைக்கு மெருகு சேர்க்கும் காரணிகள். அருமையான சிறுகதை. ஆன்ந்தவிகடன் தீபாவளி இதழில் வெளிவந்திருக்கிறது.</p>
<p>அவ்வளவுதான்.</p>
<p>மிகவும் குறைவாகத்தான் சிறுகதைகள் படித்திருக்கிறேன் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். நிறைய நல்ல சிறுகதைகளை நான் படிக்காமல் விட்டிருப்பேன் என்பது திண்ணம். அன்பர்கள் அவ்வாறான சிறுகதைகளை மேற்கோளிட்டால் மிகவும் மகிழ்வேன். நன்றி.</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/sivaramang.wordpress.com/273/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/sivaramang.wordpress.com/273/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/sivaramang.wordpress.com/273/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/sivaramang.wordpress.com/273/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/sivaramang.wordpress.com/273/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/sivaramang.wordpress.com/273/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/sivaramang.wordpress.com/273/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/sivaramang.wordpress.com/273/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/sivaramang.wordpress.com/273/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/sivaramang.wordpress.com/273/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/sivaramang.wordpress.com/273/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/sivaramang.wordpress.com/273/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/sivaramang.wordpress.com/273/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/sivaramang.wordpress.com/273/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sivaramang.wordpress.com&amp;blog=536366&amp;post=273&amp;subd=sivaramang&amp;ref=&amp;feed=1" width="1" height="1" /><div class="sharedaddy sd-like-enabled"></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://sivaramang.wordpress.com/2010/01/04/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-2009/feed/</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/d3ef1d6eddd934f7dcf8664a2950efb7?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">siva</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>தமிழ்த்திரைப்பாடல்கள் &#8211; 2009</title>
		<link>http://sivaramang.wordpress.com/2009/12/30/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-2009/</link>
		<comments>http://sivaramang.wordpress.com/2009/12/30/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-2009/#comments</comments>
		<pubDate>Wed, 30 Dec 2009 11:08:48 +0000</pubDate>
		<dc:creator>sivaramang</dc:creator>
				<category><![CDATA[இசை]]></category>
		<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://sivaramang.wordpress.com/?p=267</guid>
		<description><![CDATA[இந்த வருடத்தில் வெளியான தமிழ் திரைப்படப் பாடல்களில் என் மனதிற்குப் பிடித்த பாடல்களை இங்கே தொகுத்திருக்கிறேன். இது முற்றிலும் என் ரசனை சார்ந்தது. ஒரு இசையமைப்பாளருக்கு ஒன்று அல்லது அதிகபட்சம் இரண்டு பாடல்கள் என்ற விகித்த்தில் தேர்ந்தெடுத்திருக்கிறேன். ஜி.வி.பிரகாஷ்குமார் ஜி.வி.பிக்கு இந்த வருடம் இரண்டு ஜாக்பாட் திரைப்படங்கள் கிடைத்திருந்தன. இரண்டுமே இன்னும் வெளிவராவிட்டாலும் பாடல்கள் அனைத்தும் பெரும் அமர்க்களமாக இருந்தன. தாய் தின்ற மண்ணே -ஆயிரத்தில் ஒருவன் &#8211; விஜய் யேசுதாஸ், நித்யஸ்ரீ மகாதேவன் &#8211; வைரமுத்து, [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sivaramang.wordpress.com&amp;blog=536366&amp;post=267&amp;subd=sivaramang&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>இந்த வருடத்தில் வெளியான தமிழ் திரைப்படப் பாடல்களில் என் மனதிற்குப் பிடித்த பாடல்களை இங்கே தொகுத்திருக்கிறேன். இது முற்றிலும் என் ரசனை சார்ந்தது. ஒரு இசையமைப்பாளருக்கு ஒன்று அல்லது அதிகபட்சம் இரண்டு பாடல்கள் என்ற விகித்த்தில் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.</p>
<p><strong>ஜி.வி.பிரகாஷ்குமார்</strong></p>
<p>ஜி.வி.பிக்கு இந்த வருடம் இரண்டு ஜாக்பாட் திரைப்படங்கள் கிடைத்திருந்தன. இரண்டுமே இன்னும் வெளிவராவிட்டாலும் பாடல்கள் அனைத்தும் பெரும் அமர்க்களமாக இருந்தன.</p>
<p><strong>தாய் தின்ற மண்ணே -</strong><strong>ஆயிரத்தில் ஒருவன் &#8211; விஜய் யேசுதாஸ், நித்யஸ்ரீ மகாதேவன் &#8211; வைரமுத்து, வெட்டூரி சுந்தரமூர்த்தி</strong></p>
<p>&#8220;Song of the year&#8221; என்று பெரிய எழுத்துக்களில் போட்டாலும் தகும். பெரும் துயரத்தை உணர வைக்கிற வரிகளும், வாத்தியங்களும் இணைந்து செய்யும் குழைவு மகா அற்புதம். ஜி.வி. பிரகாஷ் போடும் பிற டப்பாங்குத்துப்பாடல்களை யாரேனும் குறை சொல்ல முனையும்போது இந்த ஒரே ஒரு பாடலையே அவர் பிரம்மாஸ்திரமாக உபயோகித்துக்கொள்ளலாம்.</p>
<p><strong>உன்பேரை சொல்லும்போதே &#8211; அங்காடித் தெரு &#8211; நரேஷ் ஐயர்</strong><strong>, </strong><strong>ஷ்ரேயே கோஷல்</strong><strong>, </strong><strong>ஹரிசரண் -நா.முத்துகுமார்</strong></p>
<p>புல்லாங்குழல், கீபோர்ட் மற்றும் நரம்பு இசைக்கருவிகளிலிருந்து மொத்தமாக வழியும் இசையுடன் இணையும் மிதமான அதிர்வு வாத்தியஙள். எழுதும்போதெ எவ்வளவு இதமாக இருக்கிறது. முதன்முதலில் இந்த பாடலைக்கேட்டபோது தளர்வான ஒரு மாலையில் முகத்தில் இதமாக காற்று உரசுவதுபோல இருந்தது. அற்புதமான பாடல்.</p>
<p>இதைத்தவிர ஆனந்ததாண்டவம் திரைப்படப்பாடல்களும் எனக்கு பிடித்திருந்தன.</p>
<p><strong>விஜய் ஆண்டனி</strong></p>
<p>விஜய் ஆண்டனி இந்த வருடத்தில் ஒரு பெரிய ஏணியில் ஏறி வந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். விதவிதமான வாய்ப்புகள் அவர் கதவைத்தட்டி அழைத்தன. அவரும் அவருடைய ஸ்டைலை ஓரளவிற்கு இயக்குனர்களுக்கேற்ப மாற்றிக்கொண்ட விதம் ரசிக்க வைத்தது. அவரின் இரண்டு பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தன இந்த வருடத்தில்.<strong> </strong></p>
<p><strong>நீ ஒத்த சொல்லு சொல்லு&#8230; &#8211; ராகுல் நம்பியார்</strong><strong>, </strong><strong>ப்ரீதா</strong> &#8211; <strong>அவள் பெயர் தமிழரசி -</strong><strong> </strong><strong>ஏகாதசி</strong></p>
<p>இந்த ஆல்பத்தில் முதலில் உள்ள் பாடல். எனக்கு மிகவும் பிடித்தது.  சாதாரண வரிகள்தான் என்றாலும் இந்த சூழ்நிலைக்கு இது பெரிதும் பொருந்துவனவாக இருந்தது. ப்ரீதாவின் குரல் சற்றே கீச்சுக்குரலாக இருந்தாலும் இந்த பாடலைத் திரையில் பார்க்கும்போது  (ஆம் துபாய் திரைப்பட விழாவில் இதன் compressed version பார்த்தேன்.) கதாநாயகியின் குரலுக்கு ஒத்து வருகிறது. நல்ல பாடல்.</p>
<p><strong>கரிகாலன் காலைப்போல -</strong><strong> </strong><strong>வேட்டைக்காரன் &#8211; சுர்ஜித்</strong><strong>, </strong><strong>சங்கீதா ராஜேஸ்வரன் &#8211; கபிலன்</strong></p>
<p>கபிலனிடமிருந்து மறக்கமுடியாத இன்னொரு டூயட்.  தாளம் போடவைக்கும் மெட்டுக்கள், ரசிக்க வைக்கும் வரிகள் என்ன அருமையான ஜோடிப்பாடல். சங்கீதா ராஜேஸ்வரனின் குரல் பாவங்கள் அருமை.</p>
<p><strong>ஜேம்ஸ் வசந்தன்</strong></p>
<p><strong>நான் போகிறேன் மேலே மேலே – நாணயம் – எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா </strong><strong> </strong></p>
<p>80,90 களில் வந்த பாடலைக்கேட்பதுபோன்ற ஒரு பிரமை இருக்கிறது இந்த பாடலைக்கேட்கும்போதெல்லாம். அநாவசிய மேற்கத்திய இசைக்கோர்ப்புகள் இல்லாமல் இருந்தாலே ஜேம்ஸின் பாடல்கள் நல்ல தரத்தில் இருக்கின்றன.</p>
<p><strong>கோடி கோடி ஆசைகள் – காவலர் குடியிருப்பு – சரத், ப்ரியாஹேமேஷ் &#8211; தாமரை</strong><strong> </strong></p>
<p>கானடா ராகப் பாடல். தமிழ் சினிமா செண்டிமெண்ட் படி கண்டிப்பாக ஹிட் ஆகும். அருமையான வரிகள். குரல்களும் இனிமை. ஆனால் இண்டர்லூட் சம்மந்தமே இல்லாமல் பொறுமையை சோதிக்கிறது. வேறு வாத்தியங்களை உபயோகித்திருக்கலாமோ?  ஆயினும் சிறப்பான அவுட்புட்.</p>
<p><strong>யுவன்ஷங்கர் ராஜா</strong><strong> </strong></p>
<p><strong>துளி துளிதுளி மழையாய் வந்தாளே – பையா &#8211; ஹரிசரண்,தன்வி – நா.முத்துகுமார்</strong></p>
<p>மென்மையான காதல்பாடல். காதுக்கு அருகில் அமர்ந்து கொண்டு பாடுவது போல ஹரிசரண் தனது குரலை சற்றே குழைவாக்கிக்கொண்டிருப்பது அழகு. ரிதம் எதுவும் இல்லாமல் காதுகளில் படரும் அந்த இரண்டாவது இண்டர்லூட் (interlude) பாடலில் ஹைலைட்.</p>
<p>சொல்லப்போனால் இந்த வருட்த்தில் யுவனின் சிறந்த ஆல்பம் இது. அட்டா மழைடா, சுத்துதே சுத்துதே ஆகிய இரண்டு பாடல்களும் மற்ற சிறப்பான பாடல்கள்.</p>
<p><strong>கடலோரம் ஒரு ஊரு – குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும் &#8211; எஸ்.பி.சரண், யுவன் ஷங்கர் ராஜா – வாலி</strong></p>
<p>யுவன்ஷங்கர் ராஜா பாடிய பாடல்தான் ஆல்பத்தில் முதலில் வரும். ஒரு நல்ல பாட்டு இவர் குரலால போச்சே என்று வருந்துவதற்கும் அதன் இரண்டாவது வெர்ஷன் இள வயது எஸ்.பி.பி குரல் போல எதிரொலிக்கும் எஸ்.பி.சரண் குரலில் வளைய வரும். அருமையான வரிகள். மென்மையான பைப் ஒலி சின்னச் சின்ன சங்கதிகள். சூப்பர்.</p>
<p><strong>கார்த்திக் ராஜா</strong><strong> </strong></p>
<p><strong>கண்ணில் தாகம் – அச்சமுண்டு அச்சமுண்டு – செளம்யா – ஆண்டாள் பிரியதர்ஷினி</strong><strong> </strong></p>
<p>என்றும் நினைவில் நிற்கின்ற, அழகான ஒலிகளினால் செறிவூட்டப்பட்ட பாடல். கார்த்திக்ராஜா வருடத்திற்கு இப்படி ஒரு பாட்டு போட்டாலே போதும். செளம்யாவின் முதல் பாடல். நிறைய பாவங்களை வெளிப்படுத்தியிருந்தார். நிச்சயமாக மிக நல்ல பாடல்.</p>
<p><strong> </strong></p>
<p><strong> </strong></p>
<p><strong>சபேஷ்-முரளி</strong><strong> </strong></p>
<p><strong>நிலா நீ வானம் காற்று – விஜய் யேசுதாஸ், சின்மயி &#8211; யுகபாரதி</strong><strong> </strong></p>
<p>இந்த பாடலையும், இதன் படமாக்கத்தையும் பார்த்துவிட்டுத்தான் முதல் நாளே திரைப்பட்த்திற்கு சென்றேன்.  நிறைய வார்த்தைகளை அர்த்தமுள்ள கோவையாக இணைத்திருக்கும் யுகபாரதியின் முயற்சி அருமை. சின்மயி குரல் மிகச்சரியாக இந்த பாடலுக்கு பொருந்தியது அழகு.</p>
<p><strong>இளையராஜா</strong></p>
<p><strong>ஒளிதரும் சூரியனும் &#8211; வால்மீகி &#8211; இளையராஜா-பெலாஷிண்டே &#8211; வாலி</strong></p>
<p>வால்மீகியில் இளையராஜா இசையமைத்திருந்த இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். மலையாள சினிமாவை விட்டுவிட்டால்  இந்த வருடத்தில் தமிழில் ராஜாவின் மிகச்சிறந்த பாடலாக இதனையே சொல்லத்தோன்றுகிறது. இந்த பாடலின் ஆண்குரலில் ஸ்ரீனிவாஸ் அல்லது கார்த்திக் பாடியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மிகவும் குழைவான பாடல். பெலா ஷிண்டே தமிழ் சினிமாவின் அடுத்த ஷ்ரேயா கோஷல்.</p>
<p><strong>வித்யாசாகர்</strong><strong></strong></p>
<p><strong>ஒருநாள் இரவில் – பென்னிதயாள், திப்பு – நா.முத்துகுமார்</strong><strong></strong></p>
<p>இந்த வருடம் முழுவதிலும் என் ரசனை அடிப்படையில் வித்யாசாகருக்கு சொல்லுக்கொள்ளும்படியாக வந்த ஒரே பாடல் இது ஒன்றுதான். நல்ல வேகம், ரசிக்கவைக்கும் பீட்ஸ் எல்லாம் சேர்ந்து சிறப்பாக வந்திருக்கிறது.</p>
<p>இந்த வருடம் ARR ஆல்பம் ஒன்றும் தமிழில் வரவில்லை. ஹாரிஸ்,  தேவிஸ்ரீ பிரசாதின் பாடல்கள் எதுவும் எனக்கு பிடிக்கவில்லை.  ஹாரிஸ் நல்ல டியூன் போட்டிருந்தாலும்  பா.விஜயின் புண்ணியத்தில் பெரும் சொதப்பலாகும்  அந்த பாடல்களை எந்த கணக்கில் சேர்ப்பதென்றே தெரியவில்லை.</p>
<p>தாமரை, முத்துக்குமார், யுகபாரதி இந்த மூவர் கூட்டணிதான் தமிழ் திரைப்படப் பாடல்களை இன்னுமொரு உயரத்திற்கு எடுத்துச்சென்று கொண்டிருக்கின்றன. அடுத்த வருடம் இவர்களிடமிருந்து மேலும் நல்ல பாடல்களை எதிர்பார்ப்போம்.</p>
<p>ஜி.வி.பிரகாஷ் மற்றும் விஜய் ஆண்டனி ஆகிய இருவரும் இந்த வருடத்தின் நம்பிக்கைக்குரிய இசையமைப்பாளர்கள் என்பேன். ஜி.வி.பி. பெரிய இயக்குனர்களிடம் சண்டை போடாமல் இருக்கவும், விஜய் ஆண்டனி இன்னும் பல நல்ல வாத்தியங்களை தனது இசைக்கோர்ப்பில் சேர்த்துக்கொள்ளவும் இடையறாது பிரார்த்திப்பேன். அதேபோல கபிலனுக்கு நிறைய காதல் பாடல்கள் வாய்ப்பு கிடைக்கவும்.</p>
<p>அவ்வளவுதான். நன்றி.</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/sivaramang.wordpress.com/267/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/sivaramang.wordpress.com/267/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/sivaramang.wordpress.com/267/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/sivaramang.wordpress.com/267/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/sivaramang.wordpress.com/267/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/sivaramang.wordpress.com/267/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/sivaramang.wordpress.com/267/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/sivaramang.wordpress.com/267/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/sivaramang.wordpress.com/267/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/sivaramang.wordpress.com/267/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/sivaramang.wordpress.com/267/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/sivaramang.wordpress.com/267/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/sivaramang.wordpress.com/267/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/sivaramang.wordpress.com/267/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sivaramang.wordpress.com&amp;blog=536366&amp;post=267&amp;subd=sivaramang&amp;ref=&amp;feed=1" width="1" height="1" /><div class="sharedaddy sd-like-enabled"></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://sivaramang.wordpress.com/2009/12/30/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-2009/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/d3ef1d6eddd934f7dcf8664a2950efb7?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">siva</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>குந்தா (kundah)</title>
		<link>http://sivaramang.wordpress.com/2009/12/28/%e0%ae%95%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be-kundah/</link>
		<comments>http://sivaramang.wordpress.com/2009/12/28/%e0%ae%95%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be-kundah/#comments</comments>
		<pubDate>Mon, 28 Dec 2009 12:34:01 +0000</pubDate>
		<dc:creator>sivaramang</dc:creator>
				<category><![CDATA[குந்தா]]></category>
		<category><![CDATA[பள்ளிநாள் ஞாபகம்]]></category>
		<category><![CDATA[வாழ்க்கை]]></category>

		<guid isPermaLink="false">http://sivaramang.wordpress.com/?p=262</guid>
		<description><![CDATA[சொர்க்கம் எங்கே இருக்கிறது என்ற கேள்வி எழுப்பப்படும்போதெல்லாம் என்னால் தயங்காமல் என் சுட்டுவிரலால் மிகத்தெளிவாக காட்ட முடியும். அது ஊட்டிக்கு 32 கிலோமீட்டர் தெற்கே மேலே இருக்கிறது. ‘குந்தா’ என்றால் அநேகருக்கு தெரியாமல் போகலாம். குந்தா நீர்மின் திட்டம் என்ற பதம் மிகச்சிலருக்கு பரிச்சிய்மாக இருக்கும். அங்கேதான் என் பள்ளி நாட்கள் கழிந்தன. கடந்துவிட்ட 29 வருட வாழ்வில் 10 பொன்னான வருடங்கள் அங்கே கழிந்தன. கலக்கமில்லாத, களங்கமில்லாத, எண்களின் பின்னால் ஓடும் எண்ணற்ற துயரங்கள் எதுவும் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sivaramang.wordpress.com&amp;blog=536366&amp;post=262&amp;subd=sivaramang&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align:justify;">சொர்க்கம் எங்கே இருக்கிறது என்ற கேள்வி எழுப்பப்படும்போதெல்லாம் என்னால் தயங்காமல் என் சுட்டுவிரலால் மிகத்தெளிவாக காட்ட முடியும். அது ஊட்டிக்கு 32 கிலோமீட்டர் தெற்கே மேலே இருக்கிறது. ‘குந்தா’ என்றால் அநேகருக்கு தெரியாமல் போகலாம். குந்தா நீர்மின் திட்டம் என்ற பதம் மிகச்சிலருக்கு பரிச்சிய்மாக இருக்கும். அங்கேதான் என் பள்ளி நாட்கள் கழிந்தன. கடந்துவிட்ட 29 வருட வாழ்வில் 10 பொன்னான வருடங்கள் அங்கே கழிந்தன. கலக்கமில்லாத, களங்கமில்லாத, எண்களின் பின்னால் ஓடும் எண்ணற்ற துயரங்கள் எதுவும் இல்லாத பருவத்தை நான் கழித்த பொழுதுகள் நிகழ்ந்த களம் ஆதலின் எனக்கு எப்போதுமே சொர்ககம் எது என்ற கேள்வி வரும்போது அதற்கு நேரே இரண்டு இணைகோடுகளைப்போட்டு குந்தா என்று  என்னால் எளிதில் எழுதிவிட முடியும்.</p>
<p style="text-align:justify;">நீலகிரி மாவட்டத்தின் தெற்கு பகுதியில் ஊட்டிக்கு மேலே 32 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்திருக்கிறது குந்தாநீர்மின் திட்டம். குந்தா அணையில் வேலை செய்பவர்களின் குடும்பத்தினர் வசிக்கும் இடம் லோயர் கேம்ப் எனப்படும். அணையின் மின்பகிர்மான வட்டம் சார்ந்த மேற்பார்வை துறையில் வேலை பார்க்கும் மக்களும் அவர்களின் குடும்பத்தினர்களும் வசிக்கும் இடம் அப்பர் கேம்ப். இரண்டிற்கும் தூரம் 5 கிலோமீட்டர்கள்தான் அல்லது ஆறு கொண்டை ஊசி வளைவுகள்(Hair Pin Bends) தாண்டி வரவேண்டும்.</p>
<p style="text-align:justify;">அதென்ன கொண்டை ஊசி வளைவுகள் (Hair Pin Bends)? அது ஒரு ஆங்கிலேயரின் இதமான கற்பனை. ஊரின் ஒரு எல்லையில் நின்று கொண்டு எதிரில் உள்ள மலையைப்பார்க்கும்போது அது ஒரு பெண்ணின் பெரிய கொண்டை போலவும் அதில் வளைந்து வளைந்து செல்லும் சாலைகள் அதில் செருகப்பெற்றுள்ள ஊசிகள் எனவும் கற்பனை செய்து கொண்டால் பயணம் செய்யும்போது ஏற்படும் தலைசுற்றல்களை அது ஓரளவு சீர்செய்யும்.</p>
<p style="text-align:justify;">நாங்கள் வசித்தது அப்பர்கேம்ப் பகுதியில். ஒட்டுமொத்தமாக கூட்டிப்பார்த்தால் ஒரு 100 வீடுகளுக்கும் அடங்கிவிடும் ஒரு சிறிய காலனி அது. யூகலிப்டஸ் வாசம் காற்றில் எப்போதும் மிதந்துகொண்டே இருக்கும். ஜீன் முதல் பிப்ரவரி வரை மிதமான குளிரில் ஊரை வைத்துக்கொண்டே இருக்கும் காலநிலை.</p>
<p style="text-align:justify;"><a href="http://sivaramang.files.wordpress.com/2009/12/kundah-in-nilgiri-map.jpg"><img class="aligncenter size-thumbnail wp-image-263" title="kundah-in-nilgiri-map" src="http://sivaramang.files.wordpress.com/2009/12/kundah-in-nilgiri-map.jpg?w=150&#038;h=109" alt="" width="150" height="109" /></a></p>
<p style="text-align:justify;">முதல் வகுப்பு முடிந்து இரண்டாம் வகுப்பு செல்லவிருந்த கோடைவிடுமுறையில் நான் குந்தாவிற்கு முதலில் வந்தேன்.  என்னால் மறக்கமுடியாததாக இருக்கும் பொழுதுகளில் ஒன்று அந்த மதியவேளை. திருப்பூர்,மேட்டுப்பாளையம்,குன்னூர் வழியாக மஞ்சூர் செல்லும் சாலையில் பயணித்துக்கொண்டிருந்தோம். மேட்டுப்பாளையத்திலிருந்து செல்லும்போது குன்னூருக்குள் செல்லாமலேயே மஞ்சூருக்கு காட்டேரி வழியாக இடது பக்கத்தில் திரும்பவேண்டும்.</p>
<p style="text-align:justify;">அவ்வளவு நேரம் தூங்கிக்கொண்டிருந்த நான் மிகச்சரியாக காட்டேரி வந்ததும் விழித்துக்கொண்டேன்.  காற்றில் டீத்தூளும், யூகலிப்டஸும் கலந்து வீசும் ஒரு ரம்மியமான வாசனை. மூன்று மணி இருக்கும். ஒரு பொட்டு கூட வெய்யில் இல்லாது கன்னங்கரேலென்ற வானமும், பச்சைப்பசேலென்ற செடிகளும், மலைகளும் ஏராளமான பட்டாம்பூச்சிகளை எனக்குள் பறக்கவிட்டது. மேட்டுப்பாளையம் வழியாக ஊட்டி வந்தவர்கள் கவனித்திருப்பீர்கள். வலது புறமாக ஒரு பலகையில் ‘ மலைகளின் இளவரசி உங்களை வரவேற்கிறாள்’ என்று. என்னைப்பொறுத்த வரையில் நான் எப்போது காட்டேரியைக் கடக்கிறேனோ அப்போதுதான் அந்த இளவரசி என்னை உளமாற தழுவிக்கொள்வாள். பேருந்து மிக மிக மெதுவாக மலை ஏறும்போது அது வெளிப்படுத்தும் ஓசையும் அதற்கேற்றாற்போல மெல்ல வானத்திலிருந்து இறங்கி வரும் மெல்லிய மூடுபனியும் உங்களின் இதயங்களில் புதிய கவிதைகளை எழுதிக்கொண்டேயிருக்கும்.</p>
<p style="text-align:justify;">அந்த நொடி தொடங்கி நான் அங்கு இருந்த 10 வருடங்களும் ஒரு பெரிய திருவிழாவென என் வாழ்வை ரசித்திருந்தேன். என் வயதொத்த நண்பர்கள், தோழிகள். அன்பைப் பொழியும் சுற்றமென மகிழ்வுக்கு இடரேதுமின்றி இருந்த தருணங்கள் அவை.</p>
<p style="text-align:justify;">தொலைக்காட்சிகள் மண்டாத காலமது. மருந்திற்கும் சினிமா வாசனை புகாத ஊராக இருந்தது. சுத்துப்பட்டு பதினெட்டுப்பட்டியும் சினிமா பார்க்கவேண்டுமென்றால் ஊட்டிக்கோ கோயம்புத்தூருக்கோதான் செல்ல வேண்டும். (பிறகு என் மேனிலைப்பள்ளி இறுதி வருடங்களில் கோகுல் தியேட்டர் என்று ஒன்று திறக்கப்பட்டு லேட் ரிலீஸ் திரைப்படங்களை திரையிட்டுக்கொல்ல ஆரம்பித்த கதையும் நடந்தேறியது.) பொழுதுபோக்கிற்கான இடங்கள் குறைவு. ஒரே ஒரு விநாயகர் கோவில் உண்டு. 5 கிலோமீட்டர்கள் கெத்தை சாலையில் சென்றால் அன்னமலை என்ற குன்றின் மேல் இருக்கும் முருகன் கோவில் ஒன்றும் உண்டு. வார இறுதிகளில் சிற்றுலாவென  ஊட்டிக்கு சென்றுவரவும் செய்வர். இதைத்தாண்டி பொழுதுபோக்குகள் ஏதும் கிடையாது.</p>
<p style="text-align:justify;">அதனை ஈடுகட்டும் வகையில் சிறுவர்களாகிய எங்களுக்கு புதிய புதிய வழிகளும் வாய்த்துக்கொண்டேயிருந்தன. காடுபுகுதல் அல்லது பழம்பொறுக்குதல் அதில் வினோதமான ஒன்று. காலையில் கிளம்பி கால்போன போக்கில் அருகில் இருக்கும் காடுகளுக்கு செல்லல். மரம் ஏறுதல், பழமரங்க்களில் பழங்களை சேர்த்துக்கொண்டு மாலையில் வீடு திரும்புதல் என்ற இலக்கற்ற அந்த பயணங்களில் உள்ள சுவை வேறு எந்த விளையாட்டிற்கும் இல்லை என்பது என் தீர்மானம்.</p>
<p style="text-align:justify;">உங்களுக்கு நீலகிரி மாவட்டத்தில் படுகர் இனம் சேர்ந்த நண்பர்கள் யாரேனும் இருக்கிறார்களா? நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். விருந்தோம்பல் என்றால் என்ன என்பதை எல்லா படகர் இல்லங்களிலும் கண்ணாற கண்டு கொள்வீர்கள். எந்த வீட்டிற்கும் சென்றுவிட்டு நீங்கள் சாப்பிடாமல் திரும்பிவிடமுடியாது. அன்பை பெரும் வெள்ளமென வடியவிடும் பெரும்சினேகிதர்கள்.  எனக்கு மஞ்சூர், கரியமலை, கீழ்குந்தா,பாக்கொரை என்று குந்தாவை சுற்றியிருந்த ஹட்டிகளில் சினேகிதர்கள்  அனேகர்கள் இருந்தார்கள்/இருக்கிறார்கள்.</p>
<p style="text-align:justify;">எல்லா விஷயங்களுக்கும் கண்டிப்பாக முடிவு உண்டு என்பது நியதி. என்னுடைய குந்தா வாழ்வும் என்னுடைய மேனிலைப்பள்ளி தேர்வு முடிவுகளோடு முடிந்து போனது. மதிப்பெண்கள்  குறைந்த தாழ்வு மனப்பான்மையில் என் நெருங்கிய நண்பர்களிடம் கூட சொல்லிக்கொள்ளாமல் ஒரு முற்றிலும் இருண்ட மாலைப்பொழுதில் கோயம்புத்தூர் பேருந்தில் ஏறிய அந்த தருணத்தில் இனிமேல் இங்கு வரவே கூடாது என்று என் அப்போதைய அறியாமையில் நினைத்துக்கொண்டேன்.</p>
<p style="text-align:justify;">அத்தனை நாட்கள் நான் பொத்திப் பொத்தி சேர்த்து வைத்திருந்த என் எல்லா உற்சாக நிமிடங்களும் அந்த ஒரே நொடியில் சுக்கு நூறாக சிதறுவதைக் கண்டேன். குழந்தைகளுக்கு சொல்லப்படும் பழங்கதைகளில் எப்போதும் நல்லதே சொல்ல வேண்டும். அப்படி சொல்லும்போதெல்லாம் நமக்கு மேலே உள்ள தேவதைகள் அப்படியே ஆகுக என்று வழிமொழியும். ஆகவே தகாதன சொல்லல் நலம் என்று சொல்வார்கள். அது என் விஷயத்தில் உண்மையானது. அதன் பின்னர் என்னால் குந்தாவிற்கு போகவே முடியவில்லை.</p>
<p style="text-align:justify;">இப்போது 12 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த 12 வருடங்களில் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. ஆனால் இன்னும் அழியாத சுவடுகளென பதிந்துவிட்ட என் குந்தா நினைவுகளை என்னால் மாற்றவே முடியவில்லை.</p>
<p style="text-align:justify;">ஒன்றும் பெரிய விஷயமல்ல. வருட விடுமுறையில் கண்டிப்பாக இரண்டு நாட்களாவது ஒதுக்கி போய்விடமுடியும்தான். ஆனால் என்னுள் பதிந்துப்போன அந்த பழைய பிம்பங்கள் உடைந்துவிடுமே என்ற பயம் என்னை தடுத்துக்கொண்டே இருக்கிறது. அப்படியே போனாலும் உறுதியாக அங்கே பழைய குந்தா நிச்சயமாக இருக்காது. அது தொழில்நுட்பத்தால் வளர்ந்து பெரும் மாற்றங்கள் சந்தித்த ஒரு புதிய நகரமாக ஏற்படுத்தப்பட்டிருக்கும். என்னோடு சேர்ந்து விளையாடிய தோழர்களும் தோழிகளும் அவரவர் கவலைகள் தோய்ந்தபடி இல்லறத்தில் இணைந்திருப்பர். ஒரு புதிய தலைமுறைக்குழந்தைகள் அவர்களுக்கென அமைக்கப்பெற்றிருக்கும் புதிய குந்தாவினை ரசிக்கத்தொடங்கியிருக்கும்.</p>
<p style="text-align:justify;">இவ்வளவு வருடங்களுக்கு பிறகு ஃபேஸ்புக் (face book) வழியாக என் பழைய பள்ளி நண்பன் ஒருவனை கண்டறிந்தேன். காசோலை என்னும் பகுதியில் வசிப்பவன். மேலாண்மையில் முதுகலை முடித்திருந்தாலும் ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்கிறான். கேட்டபோது சொன்னான். ’ஊரை விட்டு வர முடியலடா’.</p>
<p style="text-align:justify;">இவ்வளவு பிடிவாதத்தோடு என்னால் இருக்க முடியவில்லையே என்ற ஏக்கம் என்னைச்சுற்றிப் படர்ந்தது.</p>
<p style="text-align:justify;">நான் பிறந்தது தஞ்சாவூரில். என் கல்லூரிப்படிப்பும் தஞ்சையிலேயெ நிகழ்ந்தது. ஆனால் நான் ஒருபோதும் எனது சொந்த ஊர் எது என்று கேட்கப்படும்போதெல்லாம் குந்தாவையே குறிப்பிடுவது வழக்கம். என் வாழ்வில் எல்லா சந்தோஷமான நிமிடங்களையும் அது தன்னகத்தே கொண்டிருந்தது. ஏன்? கொண்டிருக்கிறது.    அது என் சந்தோஷ நினைவுகளிடையே பொதிந்து போய் பின் தொலைந்துபோய்விட்ட என் பள்ளித்தோழியென என்னை ஏங்கவிட்டுக்கொண்டேயிருக்கும். ஆனால் அந்த ஏக்கம் தரும் ஆனந்தத்தை எந்த இலக்கியமும் விவரிக்க முடியாது.</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/sivaramang.wordpress.com/262/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/sivaramang.wordpress.com/262/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/sivaramang.wordpress.com/262/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/sivaramang.wordpress.com/262/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/sivaramang.wordpress.com/262/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/sivaramang.wordpress.com/262/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/sivaramang.wordpress.com/262/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/sivaramang.wordpress.com/262/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/sivaramang.wordpress.com/262/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/sivaramang.wordpress.com/262/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/sivaramang.wordpress.com/262/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/sivaramang.wordpress.com/262/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/sivaramang.wordpress.com/262/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/sivaramang.wordpress.com/262/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sivaramang.wordpress.com&amp;blog=536366&amp;post=262&amp;subd=sivaramang&amp;ref=&amp;feed=1" width="1" height="1" /><div class="sharedaddy sd-like-enabled"></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://sivaramang.wordpress.com/2009/12/28/%e0%ae%95%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be-kundah/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/d3ef1d6eddd934f7dcf8664a2950efb7?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">siva</media:title>
		</media:content>

		<media:content url="http://sivaramang.files.wordpress.com/2009/12/kundah-in-nilgiri-map.jpg?w=150" medium="image">
			<media:title type="html">kundah-in-nilgiri-map</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>What&#8217;s your rashee? (2009)</title>
		<link>http://sivaramang.wordpress.com/2009/09/27/whats-your-rashee-2009/</link>
		<comments>http://sivaramang.wordpress.com/2009/09/27/whats-your-rashee-2009/#comments</comments>
		<pubDate>Sun, 27 Sep 2009 07:37:05 +0000</pubDate>
		<dc:creator>sivaramang</dc:creator>
				<category><![CDATA[ashutosh gowrikar]]></category>
		<category><![CDATA[கொடுமை]]></category>
		<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[செம போரு]]></category>
		<category><![CDATA[bollywood]]></category>

		<guid isPermaLink="false">http://sivaramang.wordpress.com/?p=258</guid>
		<description><![CDATA[ஏதோ ஒரு கத்துக்குட்டி இயக்குனரின் முதல் படம் போல கடுமையாக பல்லை இளிக்கிறது What’s Your Rashee. நீங்களுமா அஷுதோஷ்? மூன்றரை மணி நேரம் முழுதாக பிளேடு போடப்பட்ட முதல் திரைப்படத்தை நேற்றுதான் பார்த்தேன். லேசான லாஜிக் கூட பார்த்துவிடக்கூடாத கதை, மிக மிக மோசமான திரைக்கதை, மோசமான நடிப்பு, and what not? WYR வழக்கமான அஷுதோஷின் கூட்டணி (மிக முக்கியமாக ஏ.ஆர்.ரஹ்மான்) இல்லாமல் வந்திருக்கும் திரைப்படம். என்ன நினைத்து இதனை உருவாக்கினாரோ தெரியாது. எப்போதும் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sivaramang.wordpress.com&amp;blog=536366&amp;post=258&amp;subd=sivaramang&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>ஏதோ ஒரு கத்துக்குட்டி இயக்குனரின் முதல் படம் போல கடுமையாக பல்லை இளிக்கிறது What’s Your Rashee. நீங்களுமா அஷுதோஷ்? மூன்றரை மணி நேரம் முழுதாக பிளேடு போடப்பட்ட முதல் திரைப்படத்தை நேற்றுதான் பார்த்தேன். லேசான லாஜிக் கூட பார்த்துவிடக்கூடாத கதை, மிக மிக மோசமான திரைக்கதை, மோசமான நடிப்பு, and what not?</p>
<p>WYR வழக்கமான அஷுதோஷின் கூட்டணி (மிக முக்கியமாக ஏ.ஆர்.ரஹ்மான்) இல்லாமல் வந்திருக்கும் திரைப்படம். என்ன நினைத்து இதனை உருவாக்கினாரோ தெரியாது. எப்போதும் தனது நீண்ட நெடிய படங்களின் மூலம் ரசிகர்களை மகிழ்விப்பவர் இந்த மூன்றரை மணி நேர திரைப்படத்தின் வாயிலாக அத்தனை பேரின் வயிற்றெரிச்சலையும், தியேட்டரின் பாப்கார்ன் வசூலையும் ஒருங்கே அதிகரித்துச் சென்றிருக்கிறார்.</p>
<p>இளைய மகனுக்கு திருமணம் செய்யும் நாளில் லக்‌ஷ்மி கடாட்சம் பெருகி குடும்ப கடன் தீரும் என்ற குடும்ப ஜோசியரின் அருள்வாக்கை நம்பி அமெரிக்காவின் இருக்கும் இளைய மகனை இந்தியா வருவிக்கிறார் தந்தை. இளைய மகன் இருபதே நாளில் திருமணம் செய்ய எண்ணி ராசிக்கு ஒன்றாக 12 பெண்களைப்பார்க்கிறான். அவர்களில் யாரை திருமணம் செய்து கொள்கிறான். கடன் தீர்ந்த்தா என்பது கதை?</p>
<p>சுவாரசியமாக சொல்லப்பட்டிருக்கவேண்டிய இதனை எப்போது வீட்டிற்குப்போவோமோ என்று தியேட்டரில் எல்லோரும் எண்ணும் அளவிற்கு மெல்லிய ஜவ்வாக இழுத்திருக்கும் டைரக்டரையும் எடிட்டரையும் கட்டிப்போட்டு நாள் முழுதும் உன்னைப்போல் ஒருவன் பார்க்க வைக்க வேண்டும்.</p>
<p>ஹர்மன் பவேஜாவை சத்தியமாக இந்த திரைப்பட்த்தின் ஹீரோ ஆக்கி இருக்கவே கூடாது. 12 வேடங்களில் நடித்து கின்னஸில் இடம் பிடித்திருக்கும் பிரியங்கா சோப்ராவின் ஒரளவிற்கு சிறந்த பெர்மான்ஸ் மட்டுமே ஆறுதல். அதுவும் 3-4 கதாபாத்திரங்கள் மட்டுமே மனதில் நிற்கின்றன. ஒரு மியூசிகலாக சிறந்த பாடல்களாவது இருக்கின்றனவா என்றால் அதுவும் இல்லை. இப்படி 13 பாடல்களைப்போட்டு தேவதாஸ் ஹரிதாஸ் வரிசையில் தனது படத்தை இணைக்க நினைத்தவர் ARR ஏன் விட்டார் என்றும் தெரியவில்லை.</p>
<p>ஆக தத்தமது ராசிக்கு நேரம் சரியில்லாத அனைவருமே what’s your raashee பார்க்கலாம். அவ்வளவுதான்.</p>
<p>Very very unexpected attempt from ashutosh. Better luck next time sir.</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/sivaramang.wordpress.com/258/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/sivaramang.wordpress.com/258/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/sivaramang.wordpress.com/258/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/sivaramang.wordpress.com/258/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/sivaramang.wordpress.com/258/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/sivaramang.wordpress.com/258/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/sivaramang.wordpress.com/258/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/sivaramang.wordpress.com/258/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/sivaramang.wordpress.com/258/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/sivaramang.wordpress.com/258/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/sivaramang.wordpress.com/258/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/sivaramang.wordpress.com/258/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/sivaramang.wordpress.com/258/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/sivaramang.wordpress.com/258/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sivaramang.wordpress.com&amp;blog=536366&amp;post=258&amp;subd=sivaramang&amp;ref=&amp;feed=1" width="1" height="1" /><div class="sharedaddy sd-like-enabled"></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://sivaramang.wordpress.com/2009/09/27/whats-your-rashee-2009/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/d3ef1d6eddd934f7dcf8664a2950efb7?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">siva</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>உன்னைப்போல் ஒருவன் (2009)</title>
		<link>http://sivaramang.wordpress.com/2009/09/18/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-2009/</link>
		<comments>http://sivaramang.wordpress.com/2009/09/18/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-2009/#comments</comments>
		<pubDate>Fri, 18 Sep 2009 10:15:49 +0000</pubDate>
		<dc:creator>sivaramang</dc:creator>
				<category><![CDATA[இரா.முருகன்]]></category>
		<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[mohanlaal]]></category>

		<guid isPermaLink="false">http://sivaramang.wordpress.com/2009/09/18/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-2009/</guid>
		<description><![CDATA[ஒரு மாற்றுமொழித்திரைப்படத்தினை அதன் ஜீவன் குலையாமல் தமிழாக்கம் செய்யும்போது சிறப்பான மொழியாடல்கள் ஒன்றைக்கொண்டே அதனை செய்ய முடியும் என்று நிரூபித்திருக்க்கிறது உன்னைப்போல் ஒருவன் குழு. கமலஹாசனும் இராமுருகனும் இழைத்து இழைத்து உருவாக்கியிருக்கும் உரையாடற்காட்சிகள், எள்ளல்களும் துள்ளல்களுமாய் இழைந்தோடும் ஜீவனுள்ள வசன்ங்கள் அனைத்திற்கும் திரையரங்கத்தில் விழும் கைதட்டல்களை கேட்க இன்னும் ஒரு ஜோடி காதுகள் வேண்டும். ”இதெல்லாம் எங்க முன்னோர்கள் சார். வேணும்னா அபிவாதயே சொல்லி ட்ரை பண்றேன்”” கமிஷனர் ஆபீஸில் இருக்கும் பழைய கம்ப்யூட்டர்களை சுட்டிக்காட்டி ஹேக்கர் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sivaramang.wordpress.com&amp;blog=536366&amp;post=257&amp;subd=sivaramang&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>ஒரு மாற்றுமொழித்திரைப்படத்தினை அதன் ஜீவன் குலையாமல் தமிழாக்கம் செய்யும்போது சிறப்பான மொழியாடல்கள் ஒன்றைக்கொண்டே அதனை செய்ய முடியும் என்று நிரூபித்திருக்க்கிறது உன்னைப்போல் ஒருவன் குழு. கமலஹாசனும் இராமுருகனும் இழைத்து இழைத்து உருவாக்கியிருக்கும் உரையாடற்காட்சிகள், எள்ளல்களும் துள்ளல்களுமாய் இழைந்தோடும் ஜீவனுள்ள வசன்ங்கள் அனைத்திற்கும் திரையரங்கத்தில் விழும் கைதட்டல்களை கேட்க இன்னும் ஒரு ஜோடி காதுகள் வேண்டும். </p>
<p>”இதெல்லாம் எங்க முன்னோர்கள் சார். வேணும்னா அபிவாதயே சொல்லி ட்ரை பண்றேன்”” கமிஷனர் ஆபீஸில் இருக்கும் பழைய கம்ப்யூட்டர்களை சுட்டிக்காட்டி ஹேக்கர் இளைஞன் பேசும் வசனம் இது. ””என்னோட இன் &#8211; லாஸ் நாலு பேர் ரிலீஸ் பண்ணனும்”” கமிஷனரிடம் தொலைபேசியில் தீவிரவாதிகள் சிலரை விடுவிக்கக்கோரும் கமலின் வசனத்தின் ஒரு துண்டு,””கேரண்டி,வாரண்டி எல்லாம் தர்றதுக்கு நான் என்ன ப்ரெஷர் குக்கரா விக்கறேன்”” கிளைமாக்ஸீக்கு வெகு அருகில் ஒரு சீரியஸான உரையாடலுக்கிடையில் கமல் பேசும் இன்னொரு வசனம். இவ்வளவுதான் என்றில்லை. படம் நெடுகிலும் இப்படி குறுக்கிலும் நெடுக்கிலும் ஒரு நல்ல வெண்பொங்கல் சாப்பிடும்போது வாயில் கடிபடும் முந்திரிப்பருப்பு போல அழகான ரசிக்கவைக்கிற வசனங்கள் &#8211; ’உன்னைப்போல் ஒருவ்ன்’ திரைப்படத்தினை மிகவும் ரசித்துப்பார்க்க வைக்கிற வினையூக்கிகள்.</p>
<p>எ வெட்னெஸ்டே ஹிந்தி திரைப்பட்த்தின் சேதாரப்படுத்தப்படாத அதே திரைக்கதைதான். ஒரு நல்ல நாளின் காலைப்பொழுதில் கமிஷனர் ராகவன் மராரின் அலைபேசிக்கு வரும் அழைப்பு நகர் முழுவதும் 5 இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் சக்திவாய்ந்த குண்டுகள் வெடிக்காமலிருக்க வேண்டுமானால் நான்கு முக்கிய தீவிரவாதிகளை விடுவிக்கவேண்டும் என்கிறது, குரலுக்கு சொந்தக்கார்ரான பெயர்பெறாத அந்த கதாபாத்திரம் புதிதாக எழும்பிக்கொண்டிருக்கும் பன்மாடிக்குடில் ஒன்றில் மொட்டைமாடியில் அமர்ந்துகொண்டு அன்றைய அந்த நிகழ்வை இயக்கிக் கொண்டிருக்கிறது. இறுதியில் தீவிரவாதிகளை கமிஷனர் ஒப்படைத்தாரா? தீவிரவாதிகளை விடுவிக்க்க்கோறும் இந்த சாதாரணன் யார் என்பதுதான் திரைப்பட்த்தின் மையக்கரு.</p>
<p>ராகவன் மரார் என்கிற மலையாளி கமிஷனராக மோகன்லால். மலையாளம் செறிந்த அவரது மொழியை பலமாகப்பார்த்தால் பலம். பலவீனமாகப்பார்த்தால் பலவீனம். அரசாங்கத்தின் மெத்தன்ங்கள் அதிகாரிகளின் தலையில் வந்து விடுவதை கூர்மையான வசன்ங்களில் வெளிப்படுத்துகிறார்.  ”சி.எம். இண்டர்வியூவை பார்ப்பார். அதனால் தமிழை நல்லா உச்சரிக்கணும்” என்று தன் உதவியாளரை தொலைகாட்சி முன் பேசவைப்பது, தலைமைச்செயலாளர் லக்‌ஷ்மியிடம் தன் அதிகார எல்லைகளைப்பற்றிப் பேசுவது,’அந்த செல்போனை துடைச்சுட்டு கொடுங்க.அவங்க ட்ரேஸ் இருக்கப்போகுது’ என்று நளினமான எள்ளல் பேசுவது என்று வழக்கமான  லால் பெர்ஃபார்மென்ஸ்.</p>
<p>கமலைப்பற்றி பேச நிறைய இருக்கிறது. தாடைகள் துடிக்க, கண்கள் சிவக்க வசனம் பேசுவது என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்க ஒரு நாற்காலியில் உட்கார்ந்து உடல்மொழியிலேயே மிரட்டுவது என்பது இந்தியாவிலேயே லால், கமல் என்ற இரண்டு கலைஞர்களுக்கும் இயல்பாக வரும் விஷயமாய் இருக்கிறது. மூன்று புத்திசாலித்தனமா மூவ்கள் எனக்கு பிடித்திருந்தன. ஒன்று இந்த திரைப்பட்த்திற்கான இசை ஆல்பத்தினை பட்த்தினுள் திணிக்காமல் இருந்த்து. இரண்டாவது லாலின் மொழியை அப்படியே தொடரவிட்ட்து. தமிழ் வசன்ங்கள் அவரது மொழியில் திண்றுமோ என்ற நேரங்களில் அப்படியே ஆங்கில வசன்ங்களாக அதனை மாற்றியது. மூன்றாவது இரா.முருகனின் தேவையை வேண்டுமென்ற இடங்க்ளில் அழகாக கோர்த்திருப்பது. மூன்றுமே மிக அழகாக பட்த்தோடு இயந்து சிறப்பாக வந்திருக்கிறது.</p>
<p>Hats off kamal, lal and Ira,murugan.</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/sivaramang.wordpress.com/257/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/sivaramang.wordpress.com/257/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/sivaramang.wordpress.com/257/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/sivaramang.wordpress.com/257/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/sivaramang.wordpress.com/257/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/sivaramang.wordpress.com/257/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/sivaramang.wordpress.com/257/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/sivaramang.wordpress.com/257/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/sivaramang.wordpress.com/257/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/sivaramang.wordpress.com/257/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/sivaramang.wordpress.com/257/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/sivaramang.wordpress.com/257/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/sivaramang.wordpress.com/257/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/sivaramang.wordpress.com/257/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sivaramang.wordpress.com&amp;blog=536366&amp;post=257&amp;subd=sivaramang&amp;ref=&amp;feed=1" width="1" height="1" /><div class="sharedaddy sd-like-enabled"></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://sivaramang.wordpress.com/2009/09/18/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-2009/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/d3ef1d6eddd934f7dcf8664a2950efb7?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">siva</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>துபாய் மெட்ரோ பராக்!</title>
		<link>http://sivaramang.wordpress.com/2009/09/10/%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%ae%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%af%8b-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%af%8d/</link>
		<comments>http://sivaramang.wordpress.com/2009/09/10/%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%ae%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%af%8b-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Thu, 10 Sep 2009 04:50:03 +0000</pubDate>
		<dc:creator>sivaramang</dc:creator>
				<category><![CDATA[UAE]]></category>
		<category><![CDATA[dubai]]></category>
		<category><![CDATA[dubai metro]]></category>

		<guid isPermaLink="false">http://sivaramang.wordpress.com/?p=251</guid>
		<description><![CDATA[’he deserves this’ என்னருகில் நின்று கொண்டிருந்த ஒரு லெபானிய முதியவர் பெருமிதத்தோடு குறிப்பிட்டுக்கொண்டிருந்தார். யூனியன் ஸ்கொயர் ஸ்டேஷனில் முதல் நாள் மெட்ரோ பயணத்திற்க்காக காலையில் காத்திருந்தேன். அந்த முதியவர் குறிப்பிட்டது ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதம மந்திரியும், துபாயின் மன்னருமாகிய பெருமதிப்பிற்குரிய ஷேக் முகம்மது அவர்களின் இந்த அருஞ்சாதனையைப்பற்றித்தான். அவரின் தொலைநோக்கும், திடமும், செயல்திறமும்தான் இந்த மெட்ரோ இரயில் திட்டத்தின் வெற்றிகரமான புறப்பாடு என்பது வளைகுடாவின் அனைத்துவிதமான மக்களின் எண்ணமுமாயும் இருக்கிறது.  நீண்டு நெளிந்து வளைந்து [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sivaramang.wordpress.com&amp;blog=536366&amp;post=251&amp;subd=sivaramang&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class="wp-caption aligncenter" style="width: 520px"><img title="dubai metro " src="http://metalldesign.files.wordpress.com/2008/03/dubai-metro121.jpg?w=510&#038;h=390" alt="dubai metro 3d model" width="510" height="390" /><p class="wp-caption-text">dubai metro 3d model</p></div>
<p>’he deserves this’ என்னருகில் நின்று கொண்டிருந்த ஒரு லெபானிய முதியவர் பெருமிதத்தோடு குறிப்பிட்டுக்கொண்டிருந்தார். யூனியன் ஸ்கொயர் ஸ்டேஷனில் முதல் நாள் மெட்ரோ பயணத்திற்க்காக காலையில் காத்திருந்தேன். அந்த முதியவர் குறிப்பிட்டது ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதம மந்திரியும், துபாயின் மன்னருமாகிய பெருமதிப்பிற்குரிய ஷேக் முகம்மது அவர்களின் இந்த அருஞ்சாதனையைப்பற்றித்தான். அவரின் தொலைநோக்கும், திடமும், செயல்திறமும்தான் இந்த மெட்ரோ இரயில் திட்டத்தின் வெற்றிகரமான புறப்பாடு என்பது வளைகுடாவின் அனைத்துவிதமான மக்களின் எண்ணமுமாயும் இருக்கிறது.</p>
<p> நீண்டு நெளிந்து வளைந்து பல திருப்பங்களைக்கொண்டு ஒரு ரோலர்கோஸ்டர் போல காட்சியளித்துக்கொண்டிருந்த மெட்ரோ ரயில் சேவைக்கான உயர் பாலங்களில் இன்று முதல் பயணிகளை சுமந்து கொண்டு ரயில் சேவை தொடங்கிவிட்டிருக்கிறது. RTA என்கிற தரைவழிப்போக்குவரத்து ஆணையம் தொடங்கிவிட்ட நாளிலிருந்தே விறுவிறுப்பாக பணிகள் தொடங்கிவிட்டன. பாரசீக வளைகுடாவில் இதுதான் முதல் முயற்சி என்கிறார்கள். நீண்ட ஆளில்லாத ரயில் (driverless automated rail system) இயங்கும் முதல் பாதை என்ற பெருமைமையும் பெற்றுள்ளதாம்.</p>
<p>சிவப்பு வழித்தடம் பச்சை வழித்தடம் என்பதாக இரு வேறு ரயில்பாதைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்போது முக்கிய வணிக வளாகங்களையும், வணிகத் தடங்களையும் இணைக்கும் வண்ணமாக முதல் 10 ரயில் நிலையங்களை சிவப்பு தடத்தில் உபயோகத்திற்கெனெ திறந்து விட்டிருக்கிறது துபாய் மெட்ரோ.</p>
<p>யூனியன் ஸ்கொயர் ரயில் நிலையத்திலிருந்து எனது அலுவலகம் இயங்கும் ’துபாய் பன்னாட்டு வணிக மையம்’ (DIFC) வரையிலும் பயணம் செய்தேன். கூட்டம் குறைவுதான். வாரவிடுமுறைக்கு முதல்தினமான வியாழக்கிழமையாதலின் கொண்டாட்ட மனோபாவம் எல்லோர் உள்ளங்களிலும் குடிகொண்டிருந்தது. உற்சாகம், காத்திருப்பு, கூடிக்களித்தலில் மகிழ்ச்சி என ஆவலும் உவகையும் பொங்க ரயிலை எதிர்பார்த்திருந்தோம்.</p>
<p> முதல் நாளே நோல் (nol) எனப்படும் பயணச்சீட்டு பெறுவதற்கான அட்டையை வாங்கியிருந்தேன். ஆதலின் பயணச்சீட்டு பெறுவதில் எனக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆனால் பெரும்பான்மையொருக்கு சரியான விளக்கங்கள் கிடைத்திருக்காதலால் திண்டாடிப்போயினர். ஆயினும் மெட்ரோ ஊழியர்களின் சேவையினை சொல்ல வேண்டும். எல்லோரையும் தானே தேடிச்சென்று சேவை வழங்கினர்.</p>
<p>ரயில் நிலையங்கள் எப்போதும் போல்வே “dubai standard” என பொதுவில் வழங்கப்படுகிற வார்த்தைப்பிரயோகத்திற்கு தகுந்தவாறு மெழுகப்பட்ட சலவைக்கற்கள், ஒளிசிந்தும் விளக்குவரிசைகள், கடந்து வந்த தடங்களின் புகைப்படங்கள் என பிரம்மாண்டமாய் காட்சியளிக்கிறது. ஒவ்வொரு நிலையத்திலும் ஆரம்பகட்ட பணிகள் முதல் இன்று வரையிலான முன்னேற்றங்கள் குறித்த காணொளியும் திரையிடப்பட்டுக்கொண்டிருக்கிறது. ரயில் நிலையத்தில் புகைப்படம் எடுக்க எத்தனித்தபோது புகைப்படம் தடை செய்யப்பட்டுள்ளது நண்பர் என்று அன்பொழுக சொன்னார் ஒரு பிலிப்பினி ஊழியர். அவருக்கு நன்றி. (நாளையிலிருந்து அதற்கும் அபராதம் விதிக்கும் நிலை வரலாம்.)</p>
<p>10 நிமிடங்களுக்கு ஒருமுறை வரும் ரயில் சென்றடைந்த சில நிமிடங்களில் வந்த்து. மெல்லிய ஒரு லாபி இசை ஒலிக்க வரவேற்றது துபாய் மெட்ரோ. இரு பக்கமும் போடப்பட்ட நீல இருக்கைகள். தண்ணீரை அடிப்படையாகக் கொண்ட நீல நிற வண்ணம் ரயில் முழுவதும் பளிச்சிடுகிறது. 35 நொடிகள் தாமத்தித்து கிளம்புகிறது ரயில். இரண்டே நிமிடங்களில் கடலுக்கடியில் செல்லும் பாதையைக்கடந்து பர்துபாய் காலித் பின் அல் வாலித் என்றழைக்கப்படுகிற பர்ஜுமான் நிலையத்தை அடைந்த்து. நிச்சயமாய் இது கனவல்ல. 2 நிமிடங்களில் மக்தூம் அல்லது கர்ஹீட் பாலங்களைக்கடந்தோ அல்லது ஆப்ரா எனப்படும் படகு சவாரி வழியாகவோ தேராவிலிருந்து பர்துபாயை கண்டிப்பாக அடையவே முடியாது. நேரத்தினை கண்டிப்பாக மிச்சப்படுத்தும்.</p>
<p>பர்ஜுமான் நிறுத்த்த்தில் ஏறிய குழந்தைகளிடம் முகம் கொள்ளா மகிழ்ச்சி. அதன் பின்னர் சரியாக இரண்டு நிறுத்தங்கள் கடந்து DIFC நிறுத்த்த்தில் இறங்க எடுத்துக்கொண்ட நிமிடங்கள் மொத்தம் 7. சரியாக ஏழு நிமிடங்கள். பேருந்துக்கு காத்திருந்து, வெய்யிலில் வாடி, போக்குவரத்து நெரிசலில் சிக்கி 45 நிமிடங்கள் எடுக்கும் பயணம் ஏழே நிமிடங்களில் முடிந்த மகிழ்வோடு அலுவலகம் வந்திருக்கிறேன்.</p>
<p>49 மாதங்கள், 30000 பணியாளர்கள், 28 பில்லியன் திர்ஹாம்கள் அனைத்தையும் தன்னகத்தே விழுங்கியிருக்கிற மெட்ரோ திட்டம் அதன் பலனாக என்போன்ற சாலைப்போக்குவரத்திற்கென பேருந்தையோ, வாடகை ஊர்தியையோ பயன்படுத்துவோரின் நேரத்திலும், பணப்பைகளிலும் பால் வார்த்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.</p>
<p>மெட்ரோ வாழ்க! வளர்க!</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/sivaramang.wordpress.com/251/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/sivaramang.wordpress.com/251/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/sivaramang.wordpress.com/251/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/sivaramang.wordpress.com/251/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/sivaramang.wordpress.com/251/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/sivaramang.wordpress.com/251/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/sivaramang.wordpress.com/251/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/sivaramang.wordpress.com/251/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/sivaramang.wordpress.com/251/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/sivaramang.wordpress.com/251/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/sivaramang.wordpress.com/251/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/sivaramang.wordpress.com/251/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/sivaramang.wordpress.com/251/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/sivaramang.wordpress.com/251/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sivaramang.wordpress.com&amp;blog=536366&amp;post=251&amp;subd=sivaramang&amp;ref=&amp;feed=1" width="1" height="1" /><div class="sharedaddy sd-like-enabled"></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://sivaramang.wordpress.com/2009/09/10/%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%ae%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%af%8b-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/d3ef1d6eddd934f7dcf8664a2950efb7?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">siva</media:title>
		</media:content>

		<media:content url="http://metalldesign.files.wordpress.com/2008/03/dubai-metro121.jpg" medium="image">
			<media:title type="html">dubai metro </media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>KAMINEY(2009)</title>
		<link>http://sivaramang.wordpress.com/2009/08/17/kaminey2009/</link>
		<comments>http://sivaramang.wordpress.com/2009/08/17/kaminey2009/#comments</comments>
		<pubDate>Mon, 17 Aug 2009 05:39:46 +0000</pubDate>
		<dc:creator>sivaramang</dc:creator>
				<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[bollywood]]></category>

		<guid isPermaLink="false">http://sivaramang.wordpress.com/?p=247</guid>
		<description><![CDATA[உங்களைப்பொறுத்த வரையில் ’அட இன்னொரு தடவை பார்க்கலாம் போலருக்கே’ என்று சமீபத்தில் எண்ண வைத்த திரைப்படம் எப்போது வந்தது என நினைவுபடுத்திப்பாருங்கள். எனக்கு ஒரு இரண்டு வருடம் இருக்கலாம். ‘கமீனே’ உங்களை மறுபடியும் அப்படி எண்ண வைக்கும் சாத்தியக்கூறுகள் நிறைய இருக்கின்றன. விமர்சனங்களை விட்டுவிடுங்கள். உங்கள் மனதுக்கியைந்த முற்றிலும் இந்தியத்தனமான சற்றே  பிளாக் காமெடி தோய்த்த ஒரு ஆக்‌ஷன் திரில்லர் பார்க்க ஆசைப்பட்டீர்களாயின் கண்டிப்பாக கமீனே உங்களுக்கான திரைப்படம்தான்.  கமீனே என்ற சொல்லை rascals / scoundrels [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sivaramang.wordpress.com&amp;blog=536366&amp;post=247&amp;subd=sivaramang&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>உங்களைப்பொறுத்த வரையில் ’அட இன்னொரு தடவை பார்க்கலாம் போலருக்கே’ என்று சமீபத்தில் எண்ண வைத்த திரைப்படம் எப்போது வந்தது என நினைவுபடுத்திப்பாருங்கள். எனக்கு ஒரு இரண்டு வருடம் இருக்கலாம். ‘கமீனே’ உங்களை மறுபடியும் அப்படி எண்ண வைக்கும் சாத்தியக்கூறுகள் நிறைய இருக்கின்றன. விமர்சனங்களை விட்டுவிடுங்கள். உங்கள் மனதுக்கியைந்த முற்றிலும் இந்தியத்தனமான சற்றே  பிளாக் காமெடி தோய்த்த ஒரு ஆக்‌ஷன் திரில்லர் பார்க்க ஆசைப்பட்டீர்களாயின் கண்டிப்பாக கமீனே உங்களுக்கான திரைப்படம்தான். </p>
<div class="mceTemp mceIEcenter"><img class="aligncenter size-full wp-image-249" title="kaminey-2009-2b" src="http://sivaramang.files.wordpress.com/2009/08/kaminey-2009-2b.jpg?w=400&#038;h=580" alt="kaminey-2009-2b" width="400" height="580" /></div>
<p>கமீனே என்ற சொல்லை rascals / scoundrels என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கலாம். குட்டு(guddu), சார்லி என்ற இரட்டையர்கள்தான் இந்த திரைப்படத்தின் கதாநாயகர்கள். குட்டுவுக்கு பேசும்போது வாய் திக்கும். சார்லிக்கு பேச்சு நன்றாக வரும் என்றாலும் s என்ற உச்சரிக்கும் இடத்திலிலெல்லாம் f என்று உச்சரிப்பான்.(கேஸே என்பதற்கு ஃபேஸே, சலே என்பதற்கு ஃபலே). சார்லி குதிரை சூதாட்டங்கள் நடத்தும் ஒரு சிறு மாஃபியா குழுவில் ஆக்டிவ் உறுப்பினன். குட்டு ஒரு NGO நிறுவனத்தில் எயிட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரகன். ஆயினும் இருவரும் பல வருடங்களாய் பேச்சு வார்த்தையின்றி, மூன்று வருடங்களாய் சந்தித்தேயிராமல் வாழ்ந்து வருபவர்கள். ஒரு மழைநாள் இரவில் அவர்கள் வாழ்வில் நடைபெறும் தனித்தனி சம்பவங்கள் அவர்களை சந்திக்கவைக்கின்றன. அந்த முழுநாளில் என்ன நிகழ்ந்த்து என்பதுதான் முழுத்திரைக்கதையுமே. </p>
<p>இந்த நான் – லீனியர் திரைக்கதைதான் திரைப்பட்த்தின் முழுபலமும். முதல் 15 நிமிடங்களுக்கு என்ன நிகழ்கிறது என்று தெரியாமலேயே பாதி இருட்டும் பாதி கேமரா ஆட்டமுமாய் ஒவ்வொரு கதாபாத்திரமும் வந்துபோகின்றன. ஆனால் முன்னேயும் பின்னேயுமாய் நகரும் காட்சிகளைப்புரிந்து கொண்டபின் சுவாரசியம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது. </p>
<p>’ஜப்வீமெட்’ திரைப்படத்தில் ஆபிசர் தோற்றத்தில் வந்த அதே ஷாகித் kaதான் இந்த இரட்டையர்கள் வேடத்திலும் நடித்திருக்கிறார். இந்தப்பையனுக்கு இவ்வளவு நடிக்க வருமா என அசரடித்திருக்கிறார்.  மராத்தியப்பெண்ணாக வரும் ப்ரியங்காசோப்ராவும் ஷாஹித்,பிரியங்கா இடையே கிளர்ந்தோடும் அன்னியோன்னியமான காட்சிகள் அடுத்த ஆச்சர்யம்.   </p>
<p>மஹாராஷ்டிரா மராத்தியர்களுக்கே என முழங்கும் ஒரு அரசியல்கட்சியின் தலைவன் (அமோல் குப்தே அசரடிக்கும் ஒரு நடிகர்). ஒரு கோகெயின் கும்பலுக்கு துணைபோகும் போலீஸ் அதிகாரி, குதிரை பேரங்களை நிர்ணயிக்கும் மூன்று பெங்காலி சகோதரர்கள், மழைக்கால மும்பையின் ராத்திரி நேரங்கள், அதிரவைக்கும் பின்னணி இசை, சோர்வடையச்செய்யாத திரைக்கதை, சிலீரென தென்றலாகவும் பளீரேன மின்னலாகவும் பலே வசனங்கள என எல்லா ஏரியாக்களிலும் விஷால் பரத்வாஜ் பின்னியிருக்கிறார்.</p>
<p>கட்டாயம் திரையரங்குகளில் சென்று பாருங்கள்.</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/sivaramang.wordpress.com/247/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/sivaramang.wordpress.com/247/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/sivaramang.wordpress.com/247/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/sivaramang.wordpress.com/247/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/sivaramang.wordpress.com/247/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/sivaramang.wordpress.com/247/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/sivaramang.wordpress.com/247/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/sivaramang.wordpress.com/247/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/sivaramang.wordpress.com/247/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/sivaramang.wordpress.com/247/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/sivaramang.wordpress.com/247/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/sivaramang.wordpress.com/247/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/sivaramang.wordpress.com/247/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/sivaramang.wordpress.com/247/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sivaramang.wordpress.com&amp;blog=536366&amp;post=247&amp;subd=sivaramang&amp;ref=&amp;feed=1" width="1" height="1" /><div class="sharedaddy sd-like-enabled"></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://sivaramang.wordpress.com/2009/08/17/kaminey2009/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/d3ef1d6eddd934f7dcf8664a2950efb7?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">siva</media:title>
		</media:content>

		<media:content url="http://sivaramang.files.wordpress.com/2009/08/kaminey-2009-2b.jpg" medium="image">
			<media:title type="html">kaminey-2009-2b</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>இட்லி(ப்)பா!</title>
		<link>http://sivaramang.wordpress.com/2009/07/16/%e0%ae%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be/</link>
		<comments>http://sivaramang.wordpress.com/2009/07/16/%e0%ae%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be/#comments</comments>
		<pubDate>Thu, 16 Jul 2009 09:56:37 +0000</pubDate>
		<dc:creator>sivaramang</dc:creator>
				<category><![CDATA[உணவு]]></category>
		<category><![CDATA[வாழ்க்கை]]></category>
		<category><![CDATA[UAE]]></category>

		<guid isPermaLink="false">http://sivaramang.wordpress.com/?p=241</guid>
		<description><![CDATA[அன்புமிகு அமீரக வாசத்தீர்! மணக்க மணக்க மதுரா பொங்கல் உண்பீர் சங்கீதாவில் சகலடிபனும் சரிக்கட்டு கட்டுவீர் வசந்தம் சரவணன் என பவன்கள் பலவும் காண்பீர் நினைத்தாலே மனம் குதூகலிக்கும் எம் குசும்பர் படைத்த இட்லிகளை தவறவிட்டாலோ ஐயா நீர் ஒருபிறவிப்பயனை இழப்பீரே! இளமஞ்சள் நிறத்தினதாய் இதயத்தை உருக்குவதாய் பதமாய் வார்த்துவைத்த இதமான இட்டிலிகள் இரண்டேனும் உண்டீரேல் அன்பரே அமிர்த்தமதை பூமியில் உண்ட ஆனந்தம் பெருவீரே! அன்பு நண்பரின் இட்லிக்காகவும் அன்புக்காகவும் எழுதிய பா!<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sivaramang.wordpress.com&amp;blog=536366&amp;post=241&amp;subd=sivaramang&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>அன்புமிகு அமீரக வாசத்தீர்!</p>
<p>மணக்க மணக்க மதுரா பொங்கல் உண்பீர்<br />
சங்கீதாவில் சகலடிபனும் சரிக்கட்டு கட்டுவீர்<br />
வசந்தம் சரவணன் என பவன்கள் பலவும் காண்பீர்</p>
<p>நினைத்தாலே மனம் குதூகலிக்கும்<br />
எம் குசும்பர் படைத்த இட்லிகளை தவறவிட்டாலோ ஐயா<br />
நீர் ஒருபிறவிப்பயனை இழப்பீரே!</p>
<p>இளமஞ்சள் நிறத்தினதாய்<br />
இதயத்தை உருக்குவதாய்<br />
பதமாய் வார்த்துவைத்த<br />
இதமான இட்டிலிகள்<br />
இரண்டேனும்<br />
உண்டீரேல் அன்பரே<br />
அமிர்த்தமதை பூமியில் உண்ட<br />
ஆனந்தம் பெருவீரே!</p>
<p><a href="http://kusumbuonly.blogspot.com/2009/07/blog-post_15.html">அன்பு நண்பரின் இட்லிக்காக</a>வும் அன்புக்காகவும் எழுதிய பா!</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/sivaramang.wordpress.com/241/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/sivaramang.wordpress.com/241/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/sivaramang.wordpress.com/241/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/sivaramang.wordpress.com/241/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/sivaramang.wordpress.com/241/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/sivaramang.wordpress.com/241/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/sivaramang.wordpress.com/241/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/sivaramang.wordpress.com/241/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/sivaramang.wordpress.com/241/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/sivaramang.wordpress.com/241/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/sivaramang.wordpress.com/241/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/sivaramang.wordpress.com/241/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/sivaramang.wordpress.com/241/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/sivaramang.wordpress.com/241/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sivaramang.wordpress.com&amp;blog=536366&amp;post=241&amp;subd=sivaramang&amp;ref=&amp;feed=1" width="1" height="1" /><div class="sharedaddy sd-like-enabled"></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://sivaramang.wordpress.com/2009/07/16/%e0%ae%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be/feed/</wfw:commentRss>
		<slash:comments>15</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/d3ef1d6eddd934f7dcf8664a2950efb7?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">siva</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>ஓய் (oye)!</title>
		<link>http://sivaramang.wordpress.com/2009/07/13/%e0%ae%93%e0%ae%af%e0%af%8d-oye/</link>
		<comments>http://sivaramang.wordpress.com/2009/07/13/%e0%ae%93%e0%ae%af%e0%af%8d-oye/#comments</comments>
		<pubDate>Mon, 13 Jul 2009 08:34:08 +0000</pubDate>
		<dc:creator>sivaramang</dc:creator>
				<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[tollywood]]></category>

		<guid isPermaLink="false">http://sivaramang.wordpress.com/?p=238</guid>
		<description><![CDATA[நான் தியேட்டருக்கு சென்று பார்த்த தெலுகு படம் ஒன்றே ஒன்றுதான். அது சிரஞ்சீவி நடித்த ‘அஞ்சி’ .அதுவும் . நான் பணிபுரிந்துகொண்டிருந்த நிறுவனம் அதற்கு digital animation &#38; composition செய்திருந்த காரணத்தினால் ஓசி டிக்கெட் கொடுத்தது. படுதிராபையான படம் என்றாலும் எங்களின் கைவண்ணம் சாந்தம் ஸ்கிரீனில் எப்படி வந்திருக்கிறது என்று பார்ப்பதற்காகவே சென்றதால் உற்சாகமான அனுபவமாகவே இருந்தது. அதற்கு பிறகு வேறு எந்த தெலுகு படத்திற்கும் நான் தியேட்டரில் சென்று பார்க்க முயற்சி செய்ததில்லை என்றே [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sivaramang.wordpress.com&amp;blog=536366&amp;post=238&amp;subd=sivaramang&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>நான் தியேட்டருக்கு சென்று பார்த்த தெலுகு படம் ஒன்றே ஒன்றுதான். அது சிரஞ்சீவி நடித்த <a href="http://www.imdb.com/title/tt0239235/" target="_blank">‘அஞ்சி’</a> .அதுவும் . நான் பணிபுரிந்துகொண்டிருந்த நிறுவனம் அதற்கு digital animation &amp; composition செய்திருந்த காரணத்தினால் ஓசி டிக்கெட் கொடுத்தது. படுதிராபையான படம் என்றாலும் எங்களின் கைவண்ணம் சாந்தம் ஸ்கிரீனில் எப்படி வந்திருக்கிறது என்று பார்ப்பதற்காகவே சென்றதால் உற்சாகமான அனுபவமாகவே இருந்தது. அதற்கு பிறகு வேறு எந்த தெலுகு படத்திற்கும் நான் தியேட்டரில் சென்று பார்க்க முயற்சி செய்ததில்லை என்றே சொல்லவேண்டும்.</p>
<p>இந்த முறையும் அது திட்டமிட்டு நிகழவில்லை. நாடோடிகள் பார்க்க வேண்டும் என்ற ஆவலில்தான் திரையரங்கம் சென்றேன். ’இந்திரவிழா’ என்று போஸ்டர் சொல்லியது. அது <a href="http://en.wikipedia.org/wiki/Abbas-Mustan" target="_blank">எனக்கு மிகப்பிடித்த இரட்டை இயக்குனர்களின்</a> தேறாத திரைப்படம் <a href="http://www.imdb.com/title/tt0418460/" target="_blank">ஒன்றின்</a> மறு உருவாக்கம் என்பதை அறிந்திருந்ததால் திரும்பிவிடவே எண்ணினேன். ஆனால் ஓய் பற்றி நான் ஏற்கனவே படித்திருந்த விமர்சனங்கள் என்னை சென்று பார்க்கலாமே என்று எண்ண வைத்தது.பார்த்தேன்.</p>
<p>ஓய்  உற்சாகமாக,சுவாரசியமாக சொல்லப்பட்ட ஒரு பழைய கதை. ’கீதாஞ்சலி’ கதைதான் இது என்று சொல்லிவிடமுடியாது. அதிலிருந்து ஒரே ஒரு இழையை உருவி வேறு பாதையில் கதை சொல்லப்பட்டிருக்கிறது. இயக்குனர் ஆனந்த் ரங்கா விற்கு இது முதல் படம். சற்றே தைரியமாகத்தான் இந்த கதையை எடுத்திருக்க வேண்டும். தயாரிப்பாளர்களிடம் சற்றே மெனக்கெட்டே சம்மதம் வாங்கியிருப்பார் என்று தோன்றுகிறது. பயணிகள் கப்பல், 12 வாழ்த்துப்பொருட்கள்,பீகார் உத்திரப்பிரதேச பயணங்கள் என்று நிறைய புதிய விஷயங்களைப்புகுத்தி திரைக்கதையை சுவாரசியமாக்கியிருக்கிறார். பெரிய குறை ஒன்றும் சொல்ல முடியாத திரைவாழ்வின் ஆரம்பம்.</p>
<p>யுவன் ஷங்கர் ராஜா இந்த திரைப்படத்தின் இரண்டாவது தூண். பாடல்கள் மட்டுமல்ல பின்னணி இசையும் பரவலாக மிக நன்றாகவே வந்திருக்கிறது.சித்தார்த் ஓகே. ஆனால் ஷாமிலியின் இருப்பு அவ்வளவு சிலாக்கியத்தைக்கொடுக்கவில்லை. ஷாலினி முதலில் அறிமுகமானபோது அவரிடம் இருந்த கரிஸ்மா இவரிடம் மிகவும் குறைவாக உள்ளது. பல இடங்களில் குழந்தை கதாபாத்திர முகபாவங்களையே அவர் கொடுப்பதாகவே பட்டது. அவருக்கு மேக்கப் போட்டவரைப் பார்த்து இயக்குனர் பேச வேண்டியது நிறைய இருக்கிறது.  ஷாமிலி முதலில் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து மலையாளத்தில் நடிப்பது நல்லது அல்லது தற்போது தமிழ் சினிமாவின் ட்ரெண்டான மேக்கப்போடாத கிராமத்துப்பெண்ணாக அவர் நடிக்க அழைக்கப்படலாம்.</p>
<p>மற்றபடி இன்னும் இரண்டு வருடங்களில் <a href="http://www.behindwoods.com/tamil-movie-news/july-07-04/images/28-07-07-jeyam-ravi-raja.jpg" target="_blank">ராஜா-ரவி சகோதரர்கள்</a> இதே பெயரில் தமிழில் இதனை  வெளியிடும் வாய்ப்பு நிறைய இருக்கிறது. ஆனால் சென்ற முயற்சிகள் போலல்லாமல் தமிழில் இது வெளிவரும்போது நிறைய கமர்ஷியல் விஷயங்கள் சேர்த்தே வெளியிட வேண்டியதை அவர்கள் உணர்ந்துகொள்வார்கள்.</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/sivaramang.wordpress.com/238/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/sivaramang.wordpress.com/238/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/sivaramang.wordpress.com/238/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/sivaramang.wordpress.com/238/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/sivaramang.wordpress.com/238/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/sivaramang.wordpress.com/238/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/sivaramang.wordpress.com/238/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/sivaramang.wordpress.com/238/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/sivaramang.wordpress.com/238/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/sivaramang.wordpress.com/238/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/sivaramang.wordpress.com/238/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/sivaramang.wordpress.com/238/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/sivaramang.wordpress.com/238/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/sivaramang.wordpress.com/238/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sivaramang.wordpress.com&amp;blog=536366&amp;post=238&amp;subd=sivaramang&amp;ref=&amp;feed=1" width="1" height="1" /><div class="sharedaddy sd-like-enabled"></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://sivaramang.wordpress.com/2009/07/13/%e0%ae%93%e0%ae%af%e0%af%8d-oye/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/d3ef1d6eddd934f7dcf8664a2950efb7?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">siva</media:title>
		</media:content>
	</item>
	</channel>
</rss>
