Siva’s Chronicle

உன்னைப்போல் ஒருவன் (2009)

Posted by: sivaramang on: செப்டம்பர் 18, 2009

ஒரு மாற்றுமொழித்திரைப்படத்தினை அதன் ஜீவன் குலையாமல் தமிழாக்கம் செய்யும்போது சிறப்பான மொழியாடல்கள் ஒன்றைக்கொண்டே அதனை செய்ய முடியும் என்று நிரூபித்திருக்க்கிறது உன்னைப்போல் ஒருவன் குழு. கமலஹாசனும் இராமுருகனும் இழைத்து இழைத்து உருவாக்கியிருக்கும் உரையாடற்காட்சிகள், எள்ளல்களும் துள்ளல்களுமாய் இழைந்தோடும் ஜீவனுள்ள வசன்ங்கள் அனைத்திற்கும் திரையரங்கத்தில் விழும் கைதட்டல்களை கேட்க இன்னும் ஒரு ஜோடி காதுகள் வேண்டும்.

”இதெல்லாம் எங்க முன்னோர்கள் சார். வேணும்னா அபிவாதயே சொல்லி ட்ரை பண்றேன்”” கமிஷனர் ஆபீஸில் இருக்கும் பழைய கம்ப்யூட்டர்களை சுட்டிக்காட்டி ஹேக்கர் இளைஞன் பேசும் வசனம் இது. ””என்னோட இன் – லாஸ் நாலு பேர் ரிலீஸ் பண்ணனும்”” கமிஷனரிடம் தொலைபேசியில் தீவிரவாதிகள் சிலரை விடுவிக்கக்கோரும் கமலின் வசனத்தின் ஒரு துண்டு,””கேரண்டி,வாரண்டி எல்லாம் தர்றதுக்கு நான் என்ன ப்ரெஷர் குக்கரா விக்கறேன்”” கிளைமாக்ஸீக்கு வெகு அருகில் ஒரு சீரியஸான உரையாடலுக்கிடையில் கமல் பேசும் இன்னொரு வசனம். இவ்வளவுதான் என்றில்லை. படம் நெடுகிலும் இப்படி குறுக்கிலும் நெடுக்கிலும் ஒரு நல்ல வெண்பொங்கல் சாப்பிடும்போது வாயில் கடிபடும் முந்திரிப்பருப்பு போல அழகான ரசிக்கவைக்கிற வசனங்கள் – ’உன்னைப்போல் ஒருவ்ன்’ திரைப்படத்தினை மிகவும் ரசித்துப்பார்க்க வைக்கிற வினையூக்கிகள்.

எ வெட்னெஸ்டே ஹிந்தி திரைப்பட்த்தின் சேதாரப்படுத்தப்படாத அதே திரைக்கதைதான். ஒரு நல்ல நாளின் காலைப்பொழுதில் கமிஷனர் ராகவன் மராரின் அலைபேசிக்கு வரும் அழைப்பு நகர் முழுவதும் 5 இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் சக்திவாய்ந்த குண்டுகள் வெடிக்காமலிருக்க வேண்டுமானால் நான்கு முக்கிய தீவிரவாதிகளை விடுவிக்கவேண்டும் என்கிறது, குரலுக்கு சொந்தக்கார்ரான பெயர்பெறாத அந்த கதாபாத்திரம் புதிதாக எழும்பிக்கொண்டிருக்கும் பன்மாடிக்குடில் ஒன்றில் மொட்டைமாடியில் அமர்ந்துகொண்டு அன்றைய அந்த நிகழ்வை இயக்கிக் கொண்டிருக்கிறது. இறுதியில் தீவிரவாதிகளை கமிஷனர் ஒப்படைத்தாரா? தீவிரவாதிகளை விடுவிக்க்க்கோறும் இந்த சாதாரணன் யார் என்பதுதான் திரைப்பட்த்தின் மையக்கரு.

ராகவன் மரார் என்கிற மலையாளி கமிஷனராக மோகன்லால். மலையாளம் செறிந்த அவரது மொழியை பலமாகப்பார்த்தால் பலம். பலவீனமாகப்பார்த்தால் பலவீனம். அரசாங்கத்தின் மெத்தன்ங்கள் அதிகாரிகளின் தலையில் வந்து விடுவதை கூர்மையான வசன்ங்களில் வெளிப்படுத்துகிறார். ”சி.எம். இண்டர்வியூவை பார்ப்பார். அதனால் தமிழை நல்லா உச்சரிக்கணும்” என்று தன் உதவியாளரை தொலைகாட்சி முன் பேசவைப்பது, தலைமைச்செயலாளர் லக்‌ஷ்மியிடம் தன் அதிகார எல்லைகளைப்பற்றிப் பேசுவது,’அந்த செல்போனை துடைச்சுட்டு கொடுங்க.அவங்க ட்ரேஸ் இருக்கப்போகுது’ என்று நளினமான எள்ளல் பேசுவது என்று வழக்கமான லால் பெர்ஃபார்மென்ஸ்.

கமலைப்பற்றி பேச நிறைய இருக்கிறது. தாடைகள் துடிக்க, கண்கள் சிவக்க வசனம் பேசுவது என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்க ஒரு நாற்காலியில் உட்கார்ந்து உடல்மொழியிலேயே மிரட்டுவது என்பது இந்தியாவிலேயே லால், கமல் என்ற இரண்டு கலைஞர்களுக்கும் இயல்பாக வரும் விஷயமாய் இருக்கிறது. மூன்று புத்திசாலித்தனமா மூவ்கள் எனக்கு பிடித்திருந்தன. ஒன்று இந்த திரைப்பட்த்திற்கான இசை ஆல்பத்தினை பட்த்தினுள் திணிக்காமல் இருந்த்து. இரண்டாவது லாலின் மொழியை அப்படியே தொடரவிட்ட்து. தமிழ் வசன்ங்கள் அவரது மொழியில் திண்றுமோ என்ற நேரங்களில் அப்படியே ஆங்கில வசன்ங்களாக அதனை மாற்றியது. மூன்றாவது இரா.முருகனின் தேவையை வேண்டுமென்ற இடங்க்ளில் அழகாக கோர்த்திருப்பது. மூன்றுமே மிக அழகாக பட்த்தோடு இயந்து சிறப்பாக வந்திருக்கிறது.

Hats off kamal, lal and Ira,murugan.

2 பதில்கள் -க்கு "உன்னைப்போல் ஒருவன் (2009)"

shivaraman

excellent Pa,Ra., idly , metro train, james vsanthan and cinema criticism[yaaraiyum punpaduththaamal, thittamal , vaiyaamal]ezuthi ulliirgal

nice nature and nice blog keep it up

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திருமதி. தேனம்மை லக்‌ஷ்மணன்.

மறுமொழி இடுக

Category

சென்ற மாதங்களில்…

வருகைப்பதிவு

  • 8,476 வருகைகள்

தொடர்பு கொள்ள

siva.sgs@gmail.com

My tweets

  • @kanapraba இவர் வேறு சீனிவாசன். நான்கடவுள் producer. 1 week ago
  • @bseshadri சித்தமருத்துவம்,அடியாள் கிழக்குபாட்காஸ்ட்கள் வலையேற்றம் செய்யப்பட்டதா? 1 week ago
  • @penathal உங்க திருக்குறள் ட்வீட் பார்த்தவுடனே இதுதான் எனக்கும் தோணிச்சு.. 2 weeks ago
  • http://bit.ly/1pwZme - யார் தெரிகிறதா? 2 weeks ago
  • 2012 - அட்டகாசமாக இருக்கிறது.டிஜிடல் புரொஜக்‌ஷனில் தியேட்டரில் பார்ப்பது நல்ல அனுபவம். 2 weeks ago

 

செப்டம்பர் 2009
தி செ பு வி வெ ஞா
« ஆக    
 123456
78910111213
14151617181920
21222324252627
282930