Siva’s Chronicle

இட்லி(ப்)பா!

Posted by: sivaramang on: ஜூலை 16, 2009

அன்புமிகு அமீரக வாசத்தீர்!

மணக்க மணக்க மதுரா பொங்கல் உண்பீர்
சங்கீதாவில் சகலடிபனும் சரிக்கட்டு கட்டுவீர்
வசந்தம் சரவணன் என பவன்கள் பலவும் காண்பீர்

நினைத்தாலே மனம் குதூகலிக்கும்
எம் குசும்பர் படைத்த இட்லிகளை தவறவிட்டாலோ ஐயா
நீர் ஒருபிறவிப்பயனை இழப்பீரே!

இளமஞ்சள் நிறத்தினதாய்
இதயத்தை உருக்குவதாய்
பதமாய் வார்த்துவைத்த
இதமான இட்டிலிகள்
இரண்டேனும்
உண்டீரேல் அன்பரே
அமிர்த்தமதை பூமியில் உண்ட
ஆனந்தம் பெருவீரே!

அன்பு நண்பரின் இட்லிக்காகவும் அன்புக்காகவும் எழுதிய பா!

15 பதில்கள் -க்கு "இட்லி(ப்)பா!"

சொன்னா நம்ப மாட்டேங்கிறானுங்க சங்கர்:(

//நினைத்தாலே மனம் குதூகலிக்கும்
எம் குசும்பர் படைத்த இட்லிகளை தவறவிட்டாலோ ஐயா
நீர் ஒருபிறவிப்பயனை இழப்பீரே!//

ஆஹா!

//இளமஞ்சள் நிறத்தினதாய்
இதயத்தை உருக்குவதாய்
பதமாய் வார்த்துவைத்த
இதமான இட்டிலிகள்
இரண்டேனும்//

படிக்கும்போதே ஆசையா இருக்கு!

என் மாப்பி குசும்பன் ஒருத்தன் தான் கிளம்பிருக்கான்னு நினைச்சேன். இப்ப தான்யா தெரியுது ஒரு குரூப்பாத்தான் கிளம்பிருங்காய்ங்க.

இன்னும் எத்தனை இருக்காய்ங்க உங்க சங்கத்துல? சொல்லிடுங்கப்பு. நாங்க அப்டியே எஸ்ஸாயிருவோம்ல.

கவிதை சூப்பரா இருக்கு!

இட்லி!?

நாளைக்கு நான் ரவா தோசை சுட்டதையும் இப்படி கவிதையா வடிப்பீங்களா :) )

நான் உப்புமா செய்யப் போறேன்!

இட்லி சாப்பிட்ட எபெக்ட் இப்படி வேலை செய்யுதா!?

வேற என்னன்னவெல்லாம் தோணுது!
வடை சுட்டு திங்கணும்னு தோணுமே! தோணனும் அதான் குசும்பன்! அப்புறம் உடம்ப பத்திரமா பார்த்துகோங்க.

ஈனோ போட்டா என்னாகும்னு உங்களுக்கு சரியா தெரியல!

குசும்பன் இட்லி செஞ்சாராம் அது மல்லிப்பூ போல மென்மையா இருந்ததாம் அதை சாப்பிட்டுவிட்டு இவரு கவிதை வேறெ எழுதியிருக்காரு. ம்ம்… எல்லாம் நேரந்தேன்.

கவிதையை குசும்பனுக்கு சமர்ப்பிக்கிறேன் என ஒரு வரி போட்டுவிடவும். கோவிச்சுக்க போறார்.

வாழ்த்துகள் சிவா

ஆல் பேட் பாய்ஸ் எல்லாம் இங்க வந்தாச்சா? உங்களை எல்லாம்!

இட்டலிக்கு கவிதை எழுதிகிறார் என்றால் அதன் சுவையை கொஞ்சம் நினைத்து பாருங்க பேட் பாய்ஸ்!

அமிர்த்தமதை பூமியில் உண்ட
ஆனந்தம் பெருவீரே
தேவலோகம் சென்று
வாழ்வீரே..!!!

இப்படி முடிச்சியிருக்கலாம்

:)

இட்டலிக்கு கவிதை எழுதிகிறார் என்றால் அதன் சுவையை கொஞ்சம் நினைத்து பாருங்க பேட் பாய்ஸ்!
//

ஊசி போன வடைக்கு கூடதான் யாராவது கவுஜ எழுதும் அதுக்காக
நல்லாயிருக்குனு சொல்லிட முடியுமா..?

குசும்பனுக்கு தைரியம் இருந்தால் பதிவர் சந்திப்புக்கு அந்த இட்லியை கொண்டு வரவும்..

சிவா..

உடனடியாக ஒரு நல்ல மருத்துவரை அணுகி வாய் மற்றும் நாக்கு பகுதிகளை பரிசோதித்துக் கொள்ளவும்.

காலம் கெட்டுப் போய்க் கெடக்கு..!

இட்லியும் இனிதுடத்து இப்புவியில்
சட்னியுடன் சாலப் பரிந்து

என்பது வள்ளுவன் எழுத விட்டுப்போன குறள்.

http://kgjawarlal.wordpress.com/
kgjawarlal@yahoo.com

கருத்துக்கள் வழங்கிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

மறுமொழி இடுக

Category

சென்ற மாதங்களில்…

வருகைப்பதிவு

  • 8,472 வருகைகள்

தொடர்பு கொள்ள

siva.sgs@gmail.com

My tweets

  • @kanapraba இவர் வேறு சீனிவாசன். நான்கடவுள் producer. 1 week ago
  • @bseshadri சித்தமருத்துவம்,அடியாள் கிழக்குபாட்காஸ்ட்கள் வலையேற்றம் செய்யப்பட்டதா? 1 week ago
  • @penathal உங்க திருக்குறள் ட்வீட் பார்த்தவுடனே இதுதான் எனக்கும் தோணிச்சு.. 2 weeks ago
  • http://bit.ly/1pwZme - யார் தெரிகிறதா? 2 weeks ago
  • 2012 - அட்டகாசமாக இருக்கிறது.டிஜிடல் புரொஜக்‌ஷனில் தியேட்டரில் பார்ப்பது நல்ல அனுபவம். 2 weeks ago

 

ஜூலை 2009
தி செ பு வி வெ ஞா
« ஜூன்   ஆக »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031