Posted by: sivaramang on: ஜூன் 28, 2007
முனைவர் நா.முத்துக்குமாரின் இனிய வரிகளில் வெளியாகியிருக்கும் இரண்டு இசைத்தொகுப்புகளைக்கேட்டேன். ஒன்று சத்தம்போடாதே இன்னொன்று கிரீடம். இரண்டு தொகுப்புகளிலும் இசையை விடவும் பாடல் வரிகள் விஞ்சி நிற்பதை காணமுடிகிறது. மிக வளமான கற்பனை வளம், மீட்டரை விட சற்றும் விலகிவிடாத வார்த்தைகளிம் ஒட்டவைப்புகள், சிறந்த vocabulary என எல்லா சிறப்புகளையும் ஒருங்கே அமையப்பெற்றிருக்கின்றன முத்துக்குமாரின் பாடல்களில். இவருக்கு கிடைக்கும் பாடல் வாய்ப்புகளில் இருக்கும் versatility யும் இவரது சிறப்பான வெளிப்பாட்டிற்கு முக்கிய காரணம் என எண்ணுகிறேன்.
Posted by: sivaramang on: ஜூன் 28, 2007
இந்த திரைப்படம் வெளிவந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது என்றாலும், தியேட்டரில் நான் படம் பார்க்கச் சென்றபோது ஆபரேட்டரையும் சேர்த்து மொத்தம் மூன்றே பேர்தான் திரைப்படம் பார்த்தோம் என்றாலும், இதுவரையில் வந்த எந்த விமர்சனமும் favourable ஆக இல்லை என்றாலும், எனக்கு சமீபத்தில் வந்த ஹிந்தி திரைப்ப்டங்களில் ஏனோ மிகவும் பிடித்தது இந்த திரைப்ப்டம் என்பதாலும், மிக சிறிய அழகிய மாற்றங்கள் சில செய்திருந்தால் இந்த திரைப்படமும் முக்கியமான ஒரு திரைப்படமாக இருந்திருக்கும் என்பதாலும் இதனை பற்றி [...]