Posted by: sivaramang on: ஜூன் 26, 2007
பொன்னியின் செல்வன் புதினத்தை திரைப்படமாக எடுப்பது என்பது எல்லா இயக்குனர்களுக்குமே இருக்கும் முக்கியமான கனவுகளுள் ஒன்று. கமலஹாசன் இதனை வெளிப்படையாகவே தெரிவித்தாலும் அவரது ஆரம்பிக்கப்பட்டு hold செய்யப்பட்டிருக்கும் மருதநாயகம் அனுபவங்களே அவரை இப்போதெல்லாம் பொன்னியின் செல்வன் குறித்து பேசவிடாமல் செய்து விட்டது என எண்ணுகிறேன். மணிரத்னமும் மூன்று மணி நேரத்திற்குள் அடங்குகிற திரைக்கதையாக பொன்னியின் செல்வனை எழுதி வைத்திருப்பதாக சுஜாதா ஒரு பேட்டியின்போது தெரிவித்திருக்கிறார்.
Posted by: sivaramang on: ஜூன் 26, 2007
கதை 1:
முராசுரனுக்கும், கிருஷ்ண பரமாத்மாவிற்கும் யுகம் யுகங்களாக யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தது யுத்தம் முடிகிற வழியாக தெரியாதபோது, முராசுரனுக்கு கிருஷ்ணரை நேரடியாக வதம் செய்வது இயலாது என உணர்ந்து அவர் தூங்கும்போது அவரை கொல்ல முயற்சிக்க அந்த நேரத்தில் “ஏகாதசி தேவி” என்கிற தேவதை அவதாரம் கொண்டு முராசுரனை வதம் செய்கிறார். இதன் பரிகாரமாக கிருஷ்ணர் அவருக்கு கொடுத்த வரம்தான் “ஏகாதசி தினங்களில் பெருமாளை வழிபடும் அனைவரும் அவரின் மலரடி சேர்வார்கள் என்பது“