Siva’s Chronicle

எக்ஸலன்ட்- பா.ரா.

Posted by: sivaramang on: ஜூன் 23, 2009

தீவிரவாதம் சீக்கிரம் அழிந்துவிடவேண்டும் என்று எண்ணாதவர் யார்? எல்லோருக்கும் அவ்வெண்ணம் இருப்பினும் எனக்கு அதன் சதவீதம் சற்று அதிகமே. காரணம் யாதெனக்கேட்டால் அன்றுதானே எழுத்தாளர் பாரா துப்பாக்கிகள், தோட்டாக்கள், பதுங்கு குழிகள் சதித்திட்டங்கள் மற்றும் அவைசார்ந்த இன்னபிற வஸ்துக்களை அறவே அப்புறப்படுத்திவிட்டு அவரின் பிரத்தியேக ஸ்டைலில் எழுதும் மற்ற நாவல்கள், சிறுகதைகள் மற்றும் எக்ஸலண்ட் போன்ற புத்தகங்களை நாம் தடையின்றி படிக்க முடியும்.!

சுயமுன்னேற்றப்புத்தகங்களின்பால் எனக்கிருந்த காதலெல்லாம் கல்லூரி முடிந்த ஒரு வருடத்தில் காணமற்போயிற்று. ஆனால் இவ்வருட துவக்கத்தில் பாரா போட்டிருந்த ஒரு பதிவின்போதே எக்ஸலண்ட் பற்றி குறித்துவைத்துக்கொண்டேன். 6 மாதங்கள் கழித்து சென்றவாரத்தில் ஸ்ரீரங்கம் யானைகட்டிச் சத்திரத்தில்தான் விமோசனம் ஆனது.

சுயமுன்னேறமா! என்று முகம் சுளிப்பீராயின் கவலைப்படேல். தனித்தனியாக வெவ்வேறு பெர்ஸனாலிட்டிகளைப்பற்றிய சுவாரசியமான புத்தகமாகவும் இதனை எடுத்துக்கொள்ளலாம். பாராவின் குடும்ப டாக்டராகட்டும் இசைஞானி இளையராஜாவாகட்டும்,அவர்களிடத்திலிருந்த எந்த திறன் அவர்களை இந்த உயரத்திற்கு இட்டுச்சென்றிருக்கும் என்று ஆசிரியர் யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்.

இரண்டு குழந்தைகள் நல மருத்துவர்கள். பாராவின் குடும்ப டாக்டர்கள். இருவருமே நகரின் நல்ல மருத்துவர்கள். ஒருவர் மிக கனிவானவர். மற்றொருவர் சற்றே சிடுமூஞ்சி. ஆனால் பாராவின் 5 வயது மகளுக்கு சிடுமூஞ்சி டாக்டரைதான் மிகவும் பிடித்திருக்கிறது. ஏன்? அங்கேதான் உன்னதத்தின் சூட்சுமம் ஒளிந்துகிடக்கிறது என்கிறார் ஆசிரியர்.

 இளையராஜா சிறந்த இசையமைப்பாளர் மட்டுமல்ல. உன்னதமான இசையமைப்பாளர் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணம் ஒன்றைக்கொடுக்கிறார். அது உதாரணம் மட்டுமல்ல அந்த நிகழ்வு இல்லாது அந்த புத்தகமே முழுமையடையாது என்றும் எண்ணுகிறார். அது அப்படியே உண்மை. ஹேராம் திரைப்படம் தொடர்பான அந்த வெகு சுவாரசியமான நிகழ்வு என்ன என்பதை நீங்கள் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும். அது உங்கள் சுயத்தினை முன்னேற்றுமா என்பதில் கவலை கொள்ளேல். அது சுயத்தை மகிழ்வுபடுத்தும். கட்டாயம் உத்வேகம் கொடுக்கும். அது போதும்.

கல்கி.கி.ராஜேந்திரன் அவர்களின் சித்திரகுப்தன் பேரேடு, விஸ்வநாதன் ஆனந்த்தின் தன் தவறுகளையும், மாற்றான் தவறுகளையும் மட்டுமே குறிப்பெடுத்துக்கொள்ளும் விர்சுவல் டேட்டாபேஸ், யானியின் லிட்டரலி தன்னையே உருக்கி இசை செதுக்கும் ஜாலம், எழுத்தாளர் ஜே.எஸ்.ராகவன் அவர்களின் செய்நேர்த்தி, ஜி.வி.ஐயர் என்கிற டைரக்டரின் குணாதிசியங்கள், பின்லேடனின் கர்மயோகம், காந்தி என்கிற உன்னதத்தின் உச்ச நட்சத்திரம் ஆகியவற்றோடு பாரா என்கிற என்ஜினியரிங் மாணவன் தேங்காய் உரிக்கும் மெஷின் கண்டுபிடிக்க முயற்சித்த கதையும் உண்டு.

நான் ஏற்கனவே சொன்னதுபோல இதனை சுயமுன்னேற்றப்புத்தகம் என்று கருதி வாங்காமல் இருக்கும் அன்பர்கள், தைரியமாக அந்த அஸ்பெக்ட்ஸ் தவிர்த்து மற்ற சுவாரசியமான விஷயங்களை பாராவின் எளிய அருவி போலோடும் தமிழில் படிக்க ஒரு அருமையான வாய்ப்பு

சுயமுன்னேற்றப்புத்தகம் என்றும் பார்த்துப் படிப்பவர்களுக்கு இது உண்மையான பொக்கிஷம். என் சுயத்தை மிகவும் மகிழ்வித்த புத்தகம்.

புத்தகம் : எக்ஸலன்ட்  ஆசிரியர் : பா.ராகவன்  பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் விலை : 70 ரூபாய்

(இடையில் ஏற்பட்டுவிட்ட ஒரு எதிர்பாராத பயணத்தின் காரணமாக மிகத் தாமதமாக பதிவேற்றம் செய்யப்படுகிறது.)

பதிவர் சந்திப்புகள் ஒன்றிலும் நான் இதுவரையில் கலந்துகொண்டதில்லை. ஆர்வம் நிறைய இருந்தது. ஆனால் பயணம்,நிகழ்வுக்கான நேரம் ஆகியவற்றில் இருந்த சிக்கல்கள் காரணமாக தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. புதிய பதிவர்கள் அழைத்திருக்கிறார்கள் போகலாமா என்று குசும்பன் (என்றும் அழைக்கப்படுகிற சரவணன் ) கேட்டபோது மகிழ்வோடு ஒத்துக்கொண்டேன்.

 சுற்றிலும் வேப்பமரங்கள் அடர்ந்த புல்வெளியில் கராமா பார்க்கில் நிகழ்ந்த்து சந்திப்பு. அருகிலேயே வசிக்கும் திரு.சுந்தர் வலைப்பதிவு கூட்டத்திற்கெனவே பிரத்தியேகமாக எடுத்துவைத்திருந்த மசால்வடையும் சாஸீம் இன்னும் வெகுகாலத்திற்கு நினைவில் நிற்கும்.

 புதிய பதிவர்கள், தொடர் வாசகர்கள், ஆசாத் பாய், லியோ சுரேஷ், குசும்பன் மற்றும் அய்யனார் ஆகிய மூத்த பதிவர்கள் என ஒரு சுவாரசியமான உரையாடல் களமாக அமைந்த்து கூட்டம்.

தமிழ் திரட்டிகள் சிலவற்றினை வலைப்பதிவில் இணைப்பதின் மூலமாக வலைப்பதிவு ஒட்டுமொத்தமாக காணமல்போய்விடுவதாகத் தொடங்கியது பேச்சு. பதிவர் கெளதமின் பழைய பதிவில் ஒரு திரட்டியினை இணைத்தன் காரணமாக பதிவு ஒட்டுமொத்தமாக காணாமற்போய்விட்ட்தாகவும் தன்னால் அதனை மீட்க முடியாமற்போனது பற்றியும் பேசினார். இதனைப்பற்றிய awareness வலையில் பரப்புதல் நலம் என்றும் முடிவு செய்யப்பட்ட்து.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

2558 ஓட்டுக்கள் மட்டுமே பெற்று திருச்சி மக்களவைத்தொகுதியில் டெபாசிட் இழந்த லதிமுக வேட்பாளர் மன்சூர் அலிகானின் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகள் இரண்டு.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

’முரளி கடையில ஒரு காபி சாப்பிட்டு போயிடலாம் தம்பி’. கிடைக்க கடினமான ஒரு முக்கியமான டாக்டர் அப்பாயின்மெண்ட்டிற்காக விடியற்காலையில் புறப்பட்ட நேரத்தில் ஆட்டோக்காரனிடம் அப்பா மேற்கண்ட வாக்கியத்தை சொன்னவுடன் சற்றே கோபம் வந்தது முதலில். ஆனால் அந்த நொடியில் நினைத்திருக்கவில்லை ஒவ்வொரு முறையும் அந்த கடையை எவ்வளவு அவசரமாய் கடந்து சென்றாலும் நிதானித்து ஒரு காபி சாப்பிடமால் போவதில்லை என்பதை.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

குறிச்சொற்கள்:

விண்ணை தாண்டி வருவாயா promos

Posted by: sivaramang on: பெப்ரவரி 13, 2009

அனேகமாக கெளதம் மேனன் படமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். இயக்குனர், மற்ற எந்த விபரங்களும் இல்லாமல் கடந்த வாரம் முழுவதும் வந்துகொண்டிருந்த pre launch விளம்பரங்கள் எல்லாமே பிரமாதமாக இருக்கின்றன. யாராக இருந்தாலும் சின்ன சின்ன விபரங்களை கூட அழகாக பார்த்து வடிவமைத்ததற்கு பாராட்டுக்கள். எனினும் சிம்பு நடிக்கிறார் என்றாலே வரும் final outputபற்றிய பயங்களில்  இருந்து விடுபட முடியவில்லை.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

HAPPY NEW YEAR

Posted by: sivaramang on: ஜனவரி 1, 2009

Imtiaz Ali – 2 – Jab we met

Posted by: sivaramang on: டிசம்பர் 31, 2008

இம்தியாஸ் அலி பற்றிய எனது முதல் பதிவின் முதல் வரி, “வாழ்க்கையை ஒரு கோழி இறகைவிட லேசாக எடுத்துக்கொள்ளும் பெண் ஒருத்தி..என்று எழுதியிருந்தேன். ஜப் வீ மெட் திரைப்படத்திற்கு அத்தனை அழகையும் கொண்டு வந்து கொட்டி அதனை ஒரு அர்த்தமுள்ள திரைக்கதையாக உருவாக்கியிருப்பது காத்ரீனா கைஃ   கரீனா கபூர் அழகுற ஏற்று நிறைவாக நடித்திருக்கும் கீத் என்னும் அந்த கதாபாத்திரம்தான். 

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Imtiaz Ali -1

Posted by: sivaramang on: டிசம்பர் 30, 2008

வாழ்க்கையை ஒரு கோழி இறகினை விட லேசாக எடுத்துக்கொள்ளும் பெண் ஒருத்தி, நொடிக்கு நொடி முடிவினை, மனதினை மாற்றிக்கொண்டேயிருக்கிற உயர்வகுப்புப் பையன் ஒருவன், ஒரு சிறிய அறைக்குள் இருந்துகொண்டு தனது பெரிய குடும்பத்தினை கட்டிக்காக்கிற ஒரு பஞ்சாபித்தாத்தா, தனது மகன் மனது முதிராமல் செய்துவிட்ட தவறுகளை பெரிதும் அலட்டிக்கொள்ளாது மன்னிக்கிற ஒரு தந்தை இப்படி இம்தியாஸ் அலியின் இரண்டு திரைப்படங்கள், அவரின் ஒரு டஜன் கதாபாத்திரங்கள் எல்லாமே எனது மனதுக்கியைந்தன. 

இம்தியாஸ் அலியின் இயக்கத்தில் இரண்டு திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. இரண்டு தயாரிப்பில் இருக்கின்றன. வெளிவந்த இரண்டுமே personally  அவருடைய master pieces  என்றுதான் சொல்லுவேன்.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

1 அழகி,1 gang & ஸ்ரீராம்ராகவன்

Posted by: sivaramang on: டிசம்பர் 27, 2008

 ஸ்ரீராம் ராகவனின் இரண்டு நேர்த்தியான த்ரில்லர்கள் என்னிடம் கேட்கப்படும் ஒரு கேள்விக்கான பதிலை எளிமையாக்கிவிடும். இந்தியாவின் சிறந்த இயக்குனர்கள் பெயர்கள் கேட்கப்படும்போது மறக்காமல் SR பெயரை எழுதிச் சென்றிடுவேன். இரண்டுமே எந்த காலத்திலும் reference ஆக வைத்துக்கொள்ளக்கூடிய சுவாரசியமான திரைக்கதைகள். பெரிய நடிகர்கள் இல்லாவிடினும், கமர்ஷியல் சாகசங்கள் இல்லாமலும், அந்தந்த நாட்களில் நடப்பு ட்ரெண்ட்களில் மாட்டிக்கொண்டு விழிபிதுங்காமலும்  தேர்ந்த திரைப்படங்களை வழங்கும் இயக்குனர்களில் ஸ்ரீராம்ராகவனுக்கும் இடம் உண்டு.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

குறிச்சொற்கள்:

BABEL

Posted by: sivaramang on: அக்டோபர் 30, 2008

‘பேபல் திரைப்படத்தின் டிவிடி என்னிடம் இருக்கிறது. இருக்கிறது’, என்கிற பிரயோகம் இருந்தது என்று ஆகிப்போகும் அளவிற்கு அதன் தேய்மானம் குறைந்துகொண்டே போகின்றது. என் மனதுக்கு மிக நெருக்கமான திரைப்படங்களில் பேபல் ஒரு முக்கியமான இடம் வகிக்கிறது. அதனைப்பற்றி எழுதும் அளவிற்கு என்னிடம் திறமை இல்லை என்பதை அறிவேன் ஆயினும் ஆர்வமெனும் பெருநெருப்பினை அணைக்கும் ஒரு சிறுநீர்த்துளியாகவே இதனை எண்ணிக்கொள்வேன்.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Category

சென்ற மாதங்களில்…

வருகைப்பதிவு

  • 7,436 வருகைகள்

தொடர்பு கொள்ள

siva.sgs@gmail.com

My tweets

  • @nchokkan ஆம். நடிகர் ஆர்யாதான் தயாரிப்பாளர். 5 hours ago
  • @nchokkan ’படித்துறை’ சுகாவின் பட டைட்டிலாயிற்றே. அது நாஞ்சில் நாடனின் கதைதானா? 6 hours ago
  • @SridharNarayana oh! அப்படியா! எனக்கு பிடித்திருந்ததே! :) என சினிமா நண்பர் ஒருவரும் உங்க்ளைப்போன்ற முடிவையே சொல்லியிருந்தார். 14 hours ago
  • <ஓய்> ஷாமிலியின் screenpresence சுமாராகதான் உள்ளது. அவர் மலையாளக்கரையோரம் ஒதுங்கவேண்டும் or மேக்கப் தேவைப்படாத கதாபாத்திரங்களில் நடிக்கலாம். 15 hours ago
  • ஓய் தெலுகு திரைப்படம் மிக சுவாரசியமாக சொல்லப்பட்ட ஒரு பழைய கதை. நன்று. 15 hours ago

 

ஜூலை 2009
தி செ பு வி வெ ஞா
« ஜூன்    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031